நேர்பட யோசிப்போம்!

நேர்பட யோசிப்போம்!

சில நேரங்களில் நெருங்கிய உறவுகளே எரிச்சல் தருவார்கள். ‘என்னடா வாழ்க்கை இது’ என விரக்தி அடைய வேண்டாம். ‘பாசிட்டிவாக யோசித்தால் அந்த நினைப்பிலிருந்து சுலபமாக மீண்டு வரலாம்’ என்கிறார்கள் நிபுணர்கள். அப்படிச் சில நேர்பட யோசனைகள்...

இரவெல்லாம் ஓவராகக் குறட்டை விடும் கணவர், வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் பாடாய்ப் படுத்துகிறாரா? எரிச்சலோடு அரைத் தூக்கத்தில் அவரைத் திட்டாமல் சந்தோஷப்படுங்கள். இரவெல்லாம் கண்ட நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஊர் சுற்றாமல், டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு எங்கோ ரோட்டோரம் விழுந்து கிடக்காமல், கெட்ட சகவாசம் ஏதும் வைத்துப் பணத்தை ஊதாரியாகச் செலவழிக்காமல்... பொறுப்பாக வீட்டில் வந்து தூங்குகிறாரே என்று சந்தோஷப்படுங்கள்!

வார விடுமுறை நாட்களில் விருந்தினர்களும் நண்பர்களுமாக அடிக்கடி வருகை தந்து வீட்டை நிறைத்து விடுகிறார்கள். ஸ்நாக்ஸும் சாப்பாடுமாக அவர்களை உபசரித்து முடித்து, மாலையில் அவர்கள் கிளம்பிப் போனதும் சமையலறையில் குவிந்து கிடக்கும் பாத்திரங்களைத் துலக்க வேண்டுமே என மலைப்பு எழும்; குப்பையாகிக் கிடக்கும் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டுமே என எரிச்சல் தோன்றும். அந்த எரிச்சலையும் அழகான சந்தோஷமாக மாற்றலாம். ‘அன்பான உறவினர்களும் நேசிக்கும் நண்பர்களும் சூழ வாழ்கிறோம்’ என நினைத்துப் பாருங்கள். எரிச்சல் மறைந்து சந்தோஷம் பொங்கும்.

சமையல் செய்து முடித்த அலுப்பில் படுத்திருக்கும் நீங்கள், பாத்திரங்களைத் துலக்கி வைக்குமாறு சொன்னால், உங்கள் டீன் ஏஜ் மகள் புலம்புகிறாளா? டென்ஷன் ஆகாமல் சந்தோஷப்படுங்கள். ‘ஸ்பெஷல் கிளாஸ் போகிறேன்...’, ‘ஃபிரண்ட் வீட்டுக்குப் போகிறேன்...’ என்று எங்காவது கிளம்பிச் சென்று, உங்கள் மனசில் சந்தேகத்தையும், மனசில் பய அமிலத்தையும் சுரக்கச் செய்யாமல், வீட்டில் இருக்கிறாளே என்று சந்தோஷப்படுங்கள்!

குழந்தைகளுக்கு வாங்கித் தரும் காஸ்ட்லி ஆடைகள், சில மாதங்களிலேயே அவர்கள் போட முடியாத அளவுக்கு ‘டைட்’ ஆகிவிடுகிறதா? ‘இப்படிக் காசு கரியாகிப் போச்சே’ என எரிச்சலோடு திட்டாமல், ‘குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் அளவுக்கு சரிவிகித உணவுகளை அவர்களுக்குத் தர முடிகிற நல்ல சூழலில் நாம் இருக்கிறோமே’ என நினைத்துப் பாருங்கள். உற்சாகம் ஊற்றெடுக்கும்.

மார்க்கெட்டுக்கோ, கோயிலுக்கோ வாகனத்தில் போனால், பக்கத்தில் வண்டியை நிறுத்த இடம் கிடைக்காமல் ரொம்ப தூரத்தில் கொண்டுபோய் பார்க் செய்துவிட்டு, வெயிலில் நடந்து வர வேண்டியிருக்கிறதா? வியர்வைக் கசகசப்பில் எரிச்சல் அடையாதீர்கள். இப்படி வெளியிடங்களுக்குப் போய்வர நமக்குச் சொந்தமாக வாகனம் இருக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள்; தூரத்தில் வாகனத்தை நிறுத்த நேர்ந்தாலும், அங்கிருந்து நடந்து போய்வரும் அளவுக்கு உடல் ஆரோக்கியத்தோடு வாழ்கிறோமே என்று பெருமிதப்படுங்கள்!

ஆபீசிலும் வீட்டிலும் நாள்முழுக்க உழைத்துவிட்டு இரவு படுக்கையில் சாயும்போது, உடம்பு முழுக்க வலி பின்னியெடுக்கிறதா? முதுகுவலி தூங்கவிடாமல் செய்கிறதா? ‘ஏன் உடம்பு இப்படிப் படுத்துகிறது’ என எரிச்சல் அடையாதீர்கள். மன உறுதியோடு கடினமாக உழைக்க நம்மால் முடிகிறதே என்று சந்தோஷப்படுங்கள். நிம்மதியான உறக்கம் வந்து தழுவும்! 

ஞாயிற்றுக்கிழமையானால், அயர்ன் செய்ய வேண்டிய துணிகள் மலை போலக் குவிந்து கிடக்கிறதா? பவர்கட்டைச் சமாளித்து இதையெல்லாம் அயர்ன் செய்து முடிக்க வேண்டுமே என்ற மலைப்பான நினைப்பே எரிச்சலைக் கிளப்புகிறதா? ‘இவ்வளவு வெரைட்டியாக ஏராளமான ஆடைகளை வாங்கி அணியும் வசதியான வாழ்க்கை நமக்கு வாய்த்திருக்கிறதே’ என்று பாசிட்டிவாக யோசித்தால் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

‘மெயின் ரோடு ஓரமாக வீடு இருப்பதால் எவ்வளவு அவஸ்தை? கண்டபடித் தூசு படிகிற ஜன்னல்களை வாரா வாரம் ஒட்டடை அடிக்க வேண்டியிருக்கிறதே... அடிக்கடி துடைத்தாலும் தரை டைல்ஸ்களில் கறை படிகிறதே...’ என்று எரிச்சல்பட்டு வேலை பார்க்காதீர்கள். ‘நமக்கே நமக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. அதுவும் மெயின் ரோட்டை ஒட்டி இருக்கிறது. நம் சொத்து என்பதால்தான் இப்படி அக்கறையோடு அதைப் பராமரிக்கிறோம்’ என பாசிட்டிவாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்?

ஸ்கூல் லீவ் விட்டதும் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள் ஆட்டம் போட்டு எழுப்பும் கூச்சலில் வீட்டுக்குள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாமல் போகிறதா? பகல் தூக்கத்தை அவர்கள் பறித்துக் கொள்கிறார்களா? நோ டென்ஷன்! உற்சாகமான குழந்தைகள் சூழ்ந்திருக்கும் ஒரு இடத்தில் வாழ்கிறோம் என நினைத்தால், அவர்களின் உற்சாகம் உங்களையும் தொற்றிக் கொள்ளும். அவர்கள் போடும் கூச்சல் உங்கள் காதுகளில் விழுகிறது என்றால், உங்களின் கேட்கும் திறன் பழுதின்றித் துல்லியமாக இருக்கிறது என்று பெருமிதப்படுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சில நேரங்களில் நெருங்கிய உறவுகளே எரிச்சல் தருவார்கள். ‘என்னடா வாழ்க்கை இது’ என விரக்தி அடைய வேண்டாம். ‘பாசிட்டிவாக யோசித்தால் அந்த நினைப்பிலிருந்து சுலபமாக மீண்டு வரலாம்’ என்கிறார்கள் நிபுணர்கள். அப்படிச் சில நேர்பட யோசனைகள்...

இரவெல்லாம் ஓவராகக் குறட்டை விடும் கணவர், வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் பாடாய்ப் படுத்துகிறாரா? எரிச்சலோடு அரைத் தூக்கத்தில் அவரைத் திட்டாமல் சந்தோஷப்படுங்கள். இரவெல்லாம் கண்ட நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஊர் சுற்றாமல், டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு எங்கோ ரோட்டோரம் விழுந்து கிடக்காமல், கெட்ட சகவாசம் ஏதும் வைத்துப் பணத்தை ஊதாரியாகச் செலவழிக்காமல்... பொறுப்பாக வீட்டில் வந்து தூங்குகிறாரே என்று சந்தோஷப்படுங்கள்!

வார விடுமுறை நாட்களில் விருந்தினர்களும் நண்பர்களுமாக அடிக்கடி வருகை தந்து வீட்டை நிறைத்து விடுகிறார்கள். ஸ்நாக்ஸும் சாப்பாடுமாக அவர்களை உபசரித்து முடித்து, மாலையில் அவர்கள் கிளம்பிப் போனதும் சமையலறையில் குவிந்து கிடக்கும் பாத்திரங்களைத் துலக்க வேண்டுமே என மலைப்பு எழும்; குப்பையாகிக் கிடக்கும் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டுமே என எரிச்சல் தோன்றும். அந்த எரிச்சலையும் அழகான சந்தோஷமாக மாற்றலாம். ‘அன்பான உறவினர்களும் நேசிக்கும் நண்பர்களும் சூழ வாழ்கிறோம்’ என நினைத்துப் பாருங்கள். எரிச்சல் மறைந்து சந்தோஷம் பொங்கும்.

சமையல் செய்து முடித்த அலுப்பில் படுத்திருக்கும் நீங்கள், பாத்திரங்களைத் துலக்கி வைக்குமாறு சொன்னால், உங்கள் டீன் ஏஜ் மகள் புலம்புகிறாளா? டென்ஷன் ஆகாமல் சந்தோஷப்படுங்கள். ‘ஸ்பெஷல் கிளாஸ் போகிறேன்...’, ‘ஃபிரண்ட் வீட்டுக்குப் போகிறேன்...’ என்று எங்காவது கிளம்பிச் சென்று, உங்கள் மனசில் சந்தேகத்தையும், மனசில் பய அமிலத்தையும் சுரக்கச் செய்யாமல், வீட்டில் இருக்கிறாளே என்று சந்தோஷப்படுங்கள்!

குழந்தைகளுக்கு வாங்கித் தரும் காஸ்ட்லி ஆடைகள், சில மாதங்களிலேயே அவர்கள் போட முடியாத அளவுக்கு ‘டைட்’ ஆகிவிடுகிறதா? ‘இப்படிக் காசு கரியாகிப் போச்சே’ என எரிச்சலோடு திட்டாமல், ‘குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் அளவுக்கு சரிவிகித உணவுகளை அவர்களுக்குத் தர முடிகிற நல்ல சூழலில் நாம் இருக்கிறோமே’ என நினைத்துப் பாருங்கள். உற்சாகம் ஊற்றெடுக்கும்.

மார்க்கெட்டுக்கோ, கோயிலுக்கோ வாகனத்தில் போனால், பக்கத்தில் வண்டியை நிறுத்த இடம் கிடைக்காமல் ரொம்ப தூரத்தில் கொண்டுபோய் பார்க் செய்துவிட்டு, வெயிலில் நடந்து வர வேண்டியிருக்கிறதா? வியர்வைக் கசகசப்பில் எரிச்சல் அடையாதீர்கள். இப்படி வெளியிடங்களுக்குப் போய்வர நமக்குச் சொந்தமாக வாகனம் இருக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள்; தூரத்தில் வாகனத்தை நிறுத்த நேர்ந்தாலும், அங்கிருந்து நடந்து போய்வரும் அளவுக்கு உடல் ஆரோக்கியத்தோடு வாழ்கிறோமே என்று பெருமிதப்படுங்கள்!

ஆபீசிலும் வீட்டிலும் நாள்முழுக்க உழைத்துவிட்டு இரவு படுக்கையில் சாயும்போது, உடம்பு முழுக்க வலி பின்னியெடுக்கிறதா? முதுகுவலி தூங்கவிடாமல் செய்கிறதா? ‘ஏன் உடம்பு இப்படிப் படுத்துகிறது’ என எரிச்சல் அடையாதீர்கள். மன உறுதியோடு கடினமாக உழைக்க நம்மால் முடிகிறதே என்று சந்தோஷப்படுங்கள். நிம்மதியான உறக்கம் வந்து தழுவும்! 

ஞாயிற்றுக்கிழமையானால், அயர்ன் செய்ய வேண்டிய துணிகள் மலை போலக் குவிந்து கிடக்கிறதா? பவர்கட்டைச் சமாளித்து இதையெல்லாம் அயர்ன் செய்து முடிக்க வேண்டுமே என்ற மலைப்பான நினைப்பே எரிச்சலைக் கிளப்புகிறதா? ‘இவ்வளவு வெரைட்டியாக ஏராளமான ஆடைகளை வாங்கி அணியும் வசதியான வாழ்க்கை நமக்கு வாய்த்திருக்கிறதே’ என்று பாசிட்டிவாக யோசித்தால் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

‘மெயின் ரோடு ஓரமாக வீடு இருப்பதால் எவ்வளவு அவஸ்தை? கண்டபடித் தூசு படிகிற ஜன்னல்களை வாரா வாரம் ஒட்டடை அடிக்க வேண்டியிருக்கிறதே... அடிக்கடி துடைத்தாலும் தரை டைல்ஸ்களில் கறை படிகிறதே...’ என்று எரிச்சல்பட்டு வேலை பார்க்காதீர்கள். ‘நமக்கே நமக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. அதுவும் மெயின் ரோட்டை ஒட்டி இருக்கிறது. நம் சொத்து என்பதால்தான் இப்படி அக்கறையோடு அதைப் பராமரிக்கிறோம்’ என பாசிட்டிவாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்?

ஸ்கூல் லீவ் விட்டதும் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள் ஆட்டம் போட்டு எழுப்பும் கூச்சலில் வீட்டுக்குள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாமல் போகிறதா? பகல் தூக்கத்தை அவர்கள் பறித்துக் கொள்கிறார்களா? நோ டென்ஷன்! உற்சாகமான குழந்தைகள் சூழ்ந்திருக்கும் ஒரு இடத்தில் வாழ்கிறோம் என நினைத்தால், அவர்களின் உற்சாகம் உங்களையும் தொற்றிக் கொள்ளும். அவர்கள் போடும் கூச்சல் உங்கள் காதுகளில் விழுகிறது என்றால், உங்களின் கேட்கும் திறன் பழுதின்றித் துல்லியமாக இருக்கிறது என்று பெருமிதப்படுங்கள்.

crossmenu