தினம் ஒரு கதை - 19

இத்தாலியின் புகழ்பெற்ற சிற்பியான பெர்டெல் தோர்வால்ட்சென் (Bertel Thorvaldsen) மரவேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். எப்படியாவது பெரிய சிற்பியாக வேண்டும் என்று தீர்மானித்தார். டென்மார்க்கிலிருந்து இத்தாலி வந்து சிற்பக்கலையைக் கற்றுக் கொண்டு அழகான சிற்பங்களை செதுக்கினார்.  மிகுந்த கவனத்தோடும் கலையழகோடும் செதுக்கப்பட்ட அவை மக்கள் மத்தியில் புகழ்பெற ஆரம்பித்தது. எல்லோரும் பாராட்டினாலும், வாங்குவதற்கு யாரும் வரவில்லை.  தோர்வால்ட்சென் சிலரிடம் சென்று தன் சிற்பங்களை விற்க முயற்சி செய்கிறார். அவர்களும் வாங்குவதாக இல்லை.  ‘நம் சிற்பங்களை யாரும் காசு […]

Read More
உயரே போவது எப்படி?

புகழ்பெற்ற எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ எழுதிய மிகப் பிரபலமான கட்டுரையின் சுருக்கம் இது. ஏதோ மலை ஏறுகிறவர்களுக்கான ஆலோசனைக் கட்டுரை போல இருக்கும். ஆனால் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்குமான அட்வைஸ் பட்டியல் இது. ‘மலை’ என்ற இடத்தில் வேலை, வாழ்க்கை, லட்சியம், ஆசை என எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பொருத்தி படித்துக் கொள்ளலாம்... மலையைத் தேர்ந்தெடுங்கள் ‘அந்த மலை அழகாக இருக்கும்...’, ‘இந்த மலைதான் ஏறுவதற்கு மிகவும் சுலபமானது’ என அடுத்தவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு […]

Read More
இன்று ஒன்று நன்று!

எந்த வேலையைச் செய்யவும் உங்களால் நேரத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது; நீங்கள்தான் நேரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சார்லஸ் பிரக்ஸ்டன்

Read More
தினம் ஒரு கதை - 18

இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கையில் அழகான கூழாங்கற்களை வைத்திருந்தான். இன்னொருவன் விதம்விதமான சாக்லேட்கள் வைத்திருந்தான். ‘‘என்னிடம் இருக்கும் எல்லா கூழாங்கற்களையும் உனக்குக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதிலாக உன்னிடம் இருக்கும் சாக்லேட்கள் அனைத்தையும் கொடுத்து விடுகிறாயா’’ என்று முதல் சிறுவன் கேட்டான். சாக்லேட் வைத்திருந்த சிறுவன் சம்மதித்து, தன்னிடம் இருந்த எல்லா சாக்லேட்களையும் கொடுத்துவிட்டான். அதற்கு பதிலாக கூழாங்கற்களை வாங்கிக் கொண்டான். அன்று இரவு சாக்லேட் கொடுத்த சிறுவன் நிம்மதியாகப் படுத்துத் தூங்கினான். காரணம், […]

Read More
தினம் ஒரு கதை - 17

மிதிலை நாட்டில் சில துறவிகளுக்கு அந்த சந்தேகம் இருந்ததை நாரதர் கண்டுபிடித்துவிட்டார். என்ன சந்தேகம்? ‘மன்னர் ஜனகர் சுகமாக எல்லாவற்றையும் அனுபவித்து, வேளா வேளைக்கு விருந்து உண்டு, பட்டு மெத்தையில் படுத்துறங்கி ராஜ வாழ்க்கைதானே வாழ்கிறார். ஏன் அவரை பெரும் துறவி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அவர் எப்படி துறவியாவார்?’ அப்படி சந்தேகப்பட்ட துறவிகளை எல்லாம் நாரதர் விருந்துக்கு அழைத்தார். மூன்று நாட்கள் தொடர்ச்சியான விரதத்தால் முனிவர்கள் கடும் பசியில் இருந்தார்கள். விருந்து ஆரம்பமாயிற்று. முனிவர்கள் தத்தம் […]

Read More
இன்று ஒன்று நன்று!

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வது, கிட்டத்தட்ட எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது போன்றதுதான்!

Read More
இன்று ஒன்று நன்று!

வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள். 1. நம்பிக்கை2. சத்தியம்3. உறவு4. இதயம்இவை உடைந்தால் சத்தம் கேட்காது. ஆனால், வாழ்க்கை முழுக்க அந்த வலி இருக்கும்.

Read More
தினம் ஒரு கதை - 16

தாமஸ் ஜெஃபர்சன் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அதற்குமுன் துணை ஜனாதிபதியாக இருக்கும்போது தனியே பயணம் மேற்கொள்கிறார். சூழ்நிலை காரணமாக சிறுநகரம் ஒன்றில் இரவு தங்க வேண்டிய நிலை வருகிறது. அப்போது திடீரென பெய்த மழையில் நனைந்து, அவர் உடையெல்லாம் சேறாகிவிட்டது. அந்த அழுக்கு கோலத்துடன் ஒரு விடுதிக்குச் சென்று, ‘‘அறை இருக்கிறதா?’’ என்றார். விடுதி உரிமையாளர் இவரின் கோலத்தைப் பார்த்து, ‘‘அதெல்லாம் இல்லை’’ என்று அலட்சியமாகச் சொன்னார். தாமஸ் ஜெபர்சன் வேறு விடுதி பார்த்துச் […]

Read More
தன்னம்பிக்கையை செதுக்கும் 6 வழிகள்!

வாள் கலை! ஜப்பானிய சாமுராய் வீரர்களைக் கேட்டால், ‘‘போரும் காதலும் ஒன்றுதான்’’ என்பார்கள். போரில் மனிதர்களை வெல்ல வேண்டியிருக்கிறது; காதலில் மனித மனங்களை வெல்ல வேண்டியிருக்கிறது. போர்முனைக்கு ஒரு வீரன் எடுத்துச் செல்லும் வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதே ஒரு மாபெரும் கலை. தன்னிகரற்ற வாள் சண்டை வீரரும், புகழ்பெற்ற ஜென் துறவியுமான தலான், இதுபற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது நிஜத்தில் வாள் சண்டைக்கான கையேடு இல்லை; வாழ்க்கைக் கையேடு! தன்னம்பிக்கையை வளர்க்கும் அந்தக் கையேட்டிலிருந்து […]

Read More
1 2 3 4
crossmenu