மதிப்பிற்குரியவர்களுக்கு...14

வணக்கம். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்றாவது கை, நம்பிக்கை’ என்பார்கள். இரண்டு கைகள் இல்லாமல்கூட நம்மால் வாழ்ந்து விடமுடியும். நம்பிக்கையில்லாமல் வாழ்க்கை இல்லை. ‘‘நாளை சந்திக்கிறேன்’’ என்ற வார்த்தைகளே நம்பிக்கையிலிருந்து பிறப்பவைதான். நிச்சயமற்ற மனித வாழ்வின் ஆணிவேராக இருப்பது, ‘நாளை எல்லாம் மாறும்’ என்ற தீவிர நம்பிக்கைதான். தலைமுறை தலைமுறையாக ஒரு சமூகம் பின்பற்றி வரும் பல்வேறு விதமான நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால், அதில் பல அர்த்தப்பூர்வமான காரணங்கள் ஒளிந்திருக்கும். ‘புதிதாகத் திருமணமான தம்பதி, ஆடி மாதம் ஒன்றாக […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு..13

வணக்கம். எங்கள் நிறுவனத்தில் ஒரு இளைஞர் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்தார். மார்க்கெட்டிங்கிற்குப் புதிதாக வந்திருக்கும் அந்த இளைஞரிடம், ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த வேலையைக் குறித்த நேரத்திற்குள் அவரால் செய்து முடிக்க முடியவில்லை. ‘ஏன் என்னால் நேரத்திற்கு இந்த வேலையைச் செய்ய முடியவில்லை’ என்று காரணங்களை அடுக்கியபோது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘அவரைப் போல் மற்றவர்கள் யாரும் பொறுப்போடு இல்லை’ என்பதே அவரின் ஆதங்கம். வெற்றி பெறும்போது அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று நினைப்பதும், […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...12

வணக்கம். பேச்சு என்பது கருத்துகளை பரிமாற உதவும் கருவி மட்டும் அல்ல; அது மனிதனின் தனித்த அடையாளம். கலைகளுள் தலைசிறந்த கலை. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று சொல்வார்கள். அதன் அர்த்தம், ‘பேசத் தெரிந்த பிள்ளை எளிதில் ஜெயிக்கும்’ என்பதுதான். முருகன் மயிலேறி உலகம் சுற்றி வருவதற்குள், பிள்ளையார் ‘பெற்றோரே என் உலகம்’ என்று சொல்லி அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தை வாங்கியே விட்டார். பேச்சு என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி. சரியாகப் பயன்படுத்த தெரியாமல் போனால், […]

Read More
எதிரியை நேசியுங்கள்!

நண்பர்களை நேசிப்பது சுலபம்; உறவினர்கள் மீது அன்பு காட்டுவது அதைவிட எளிது. எதிரிகளை நேசிக்க முடியுமா? ஒரு வழக்கறிஞராக தென் ஆப்ரிக்கா போன காந்தியை அந்த மண் மகத்தான மகாத்மாவாக திருப்பி அனுப்பியது. ‘எதிரியை நேசிப்பது எப்படி’ என்பதை அங்கு காந்தி கற்றுக்கொண்டார். நமக்கும் கற்றுத் தருகிறார். தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களின் சம உரிமைக்காக பெரும் போராட்டங்கள் நடத்தினார் காந்தி. அதனால் அங்கு ஆதிக்கம் செலுத்திவந்த வெள்ளையர்களின் தாக்குதலுக்கு அவர் அடிக்கடி ஆளாவதுண்டு. அப்படி ஒருமுறை அவர் […]

Read More
தினம் ஒரு கதை - 61

பாலைவனம் என்றால் மணலாகக் கொட்டிக் கிடக்கும் இடம் மட்டும் அல்ல. செடி, கொடிகள் எதுவும் வளரமுடியாத பனிப்பிரதேசங்களும் பாலைவனம்தான். அப்படி ஒரு பாலைவனத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அப்பாவும் மகனும் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் நடக்க நடக்க பனிப்பாறைகள்தான் இருந்தனவே தவிர வேறு எதுவுமில்லை. பிடித்து சாப்பிட மீன் இருக்கும் குளம், குட்டை என்று எதுவுமில்லை. எல்லாமே உறைந்திருந்தன. பசியால் உயிர் போய்விடுமோ என்ற பயம் மகனுக்கு ஏற்பட்டது. அப்பாவைப் பார்த்தான். ‘‘ஏதாவது வழி இருக்கும், தளர்ந்து […]

Read More
பேசத் தெரிய வேணும்!

மேடையில் மட்டுமில்லை... மனிதர்களோடு பேசுவதற்கும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டில், அலுவலகத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், உறவுகள் மத்தியில், நண்பர்கள் கூட்டத்தில், தொலைபேசியில், ஏன்... அறிமுகம் இல்லாத புது இடத்திலும் புது மனிதர்களிடமும் பேச்சுதான் நாம் விரும்பும் விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது. நாம் விரும்புவது எதுவானாலும், அதைப் பேச்சின் மூலமே வெளிப்படுத்த முடியும்; அதன் விளைவான செயல்களால் அடைய முடியும். அதற்கு எப்படிப் பேச வேண்டும்? * பேச்சு என்பது வெறுமனே தகவல் பரிமாற்றம் அல்ல. ‘இதை […]

Read More
முதிய குழந்தைகளைக் கொண்டாடுங்கள்!

பெற்றோரை பட்டினி போட்டு தவிக்க விடும் பிள்ளைகள்... சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு வீதியில் விரட்டிவிடும் மகன்கள்... இப்படித் தொடரும் கொடுமைகள் தொடர்பாக பெற்றோர்கள் புகார் செய்தால், பிள்ளைகளைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் வந்தபோது, பெற்றோர் மீதான பாசத்தை சட்டம் போட்டு நிலைநிறுத்த வேண்டியிருக்கிறதே என எல்லோரும் வேதனைப்பட்டார்கள். ஆனால், ‘பொதுவாகவே முதியோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மனநிலை இந்தியர்களுக்கு இருக்கிறது’ என்கிறது ஒரு சர்வே. ‘ஏஜ்வெல் […]

Read More
சாதனை புரிவதற்கு என்ன வேண்டும்?

ஒருமுறை நாரதர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு வாலிப யோகி தியானத்தில் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்திருந்தது. நாரதரின் ‘‘நாராயண...’’ நாமத்தைக் கேட்டதும் அந்த யோகி கண்விழித்துப் பார்த்தார். ‘‘நாரத பகவானே, எங்கு சென்று கொண்டிருக்கிறீர்?’’ என்றார். ‘‘நான் கைலாயம் சென்று கொண்டிருக்கிறேன்’’ என்றார் நாரதர். ‘‘அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நான் நீண்ட காலமாக சிவபெருமானை தரிசிப்பதற்காக தவம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை காலம் தவம் […]

Read More
டென்ஷனைத் துரத்துங்கள்!

டென்ஷனைத் துரத்துங்கள்! ‘முகம் என்பது மனதின் கண்ணாடி’ என்பார்கள். காலை நேரத்தில் பரபரப்பாக அலுவலகத்துக்கு ஓடும் பலரது மனக் கண்ணாடிகளை சற்றே நெருங்கி உற்றுக் கவனியுங்கள். அந்த முகங்களில் முழுக்கவே டென்ஷன் மண்டிக் கிடப்பதைத் தெரிந்து கொள்வீர்கள். சில முகங்கள் எண்ணெய் சட்டி போல தகிக்கும். கடுகு போட்டால் பொரிந்து தூரத்தில் போய் விழும். சில முகங்களில் அயர்ன் பாக்ஸ் போல ஆவி பறக்கும். தடிமனான படுக்கை விரிப்பைக்கூட நேர்த்தியாக அயர்ன் செய்து விடலாம். வேறு சில […]

Read More
இன்று ஒன்று நன்று!

பாதி மூடியிருக்கும் கதவை ‘பாதிக் கதவு திறந்திருக்கிறது’ என்பவனே தன்னம்பிக்கையாளன்!

Read More
crossmenu