சச்சினிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர், ஒரு நீண்ட சகாப்தம் படைத்தவர். கிரிக்கெட் என்ற விளையாட்டை அறியாதவர்களும் வெறுப்பவர்களும்கூட சச்சினை அறிவார்கள். தன் விளையாட்டுத் திறமையால் மட்டுமின்றி, தனிமனித ஒழுக்கத்தாலும் இந்தியர்கள் அனைவரின் நல்மதிப்பையும் பெற்றவர். உதாரண புருஷர்களுக்கு வறட்சி நிலவும் தேசத்தில், இரண்டு தலைமுறை இளைஞர்கள் மனதில் நம்பிக்கை மிக்க ரோல்மாடலாக உருவெடுத்தவர். தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபலங்கள் இங்கே குறைவு. அதிலும் இந்தக் காலத்தில் புகழேணியின் உச்சியில் யாரும் பல காலம் நிலைத்திருக்க முடிவதில்லை. […]

Read More
டென்ஷனைத் துரத்துங்கள்!

டென்ஷனைத் துரத்துங்கள்! ‘முகம் என்பது மனதின் கண்ணாடி’ என்பார்கள். காலை நேரத்தில் பரபரப்பாக அலுவலகத்துக்கு ஓடும் பலரது மனக் கண்ணாடிகளை சற்றே நெருங்கி உற்றுக் கவனியுங்கள். அந்த முகங்களில் முழுக்கவே டென்ஷன் மண்டிக் கிடப்பதைத் தெரிந்து கொள்வீர்கள். சில முகங்கள் எண்ணெய் சட்டி போல தகிக்கும். கடுகு போட்டால் பொரிந்து தூரத்தில் போய் விழும். சில முகங்களில் அயர்ன் பாக்ஸ் போல ஆவி பறக்கும். தடிமனான படுக்கை விரிப்பைக்கூட நேர்த்தியாக அயர்ன் செய்து விடலாம். வேறு சில […]

Read More
நம்பிக்கையின் பாதை!

கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும் முயற்சியில் இருந்தது அந்தப் பட்டாம்பூச்சி. கூட்டின் ஓடு லேசாக விரிசல் அடைய, அந்த ஓட்டினை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப் போராடிக் கொண்டிருந்தது அது. அக்கறையோடு அதைப் பார்த்தான் ஒரு சிறுவன். அது நீண்ட போராட்டம் என்பதை அவன் அறியவில்லை. பட்டாம்பூச்சி கூட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லேசாக உடைத்துவிட்டான். அதன் வழியே வெளியில் வந்த பட்டாம்பூச்சி, சிறிது நேரம் பறக்கப் போராடிவிட்டு இறந்து போகிறது. சிறுவன் […]

Read More
மகாபாரதம் சொல்லித் தரும் நிர்வாகக் கலை!

அம்புப் படுக்கையில் இருந்தபடி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தர்மருக்கும் பாண்டவர்களுக்கும் பல உபதேசங்களைச் சொன்னார் பிதாமகர் பீஷ்மர். அதில் ‘ராஜ நீதி’ என அவர் சொல்லியிருக்கும் பல விஷயங்கள், வாழ்க்கையில் வெற்றியை அடையத் துடிக்கும் பலருக்கும் நிர்வாகக் கலை மந்திரங்களாக இருக்கும். * எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது. வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தேவை. இவ்விரண்டில் முயற்சியே மேலானது. ஒருவேளை உன் முயற்சி வீணாய் […]

Read More
‘‘நீ நீயாக இரு!’’

நூற்றுக்கணக்கான மேடைகளில், ஆயிரக்கணக்கான மக்களையும் மாணவர்களையும் சந்தித்து, லட்சக்கணக்கான இளைய தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருந்து, கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு உரையும் தன்னம்பிக்கை உரம் தரும். அவரது தாய்மண்ணில் அமைந்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ‘நீ நீயாக இரு’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையின் சில பகுதிகள்: ‘‘தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். […]

Read More
தன்னம்பிக்கையை செதுக்கும் 12 வழிகள்!

பலவீனங்களை உணருங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேளுங்கள். உங்கள் பலவீனம் எது, உங்களிடம் நீங்கள் நினைத்து நினைத்து வெட்கப்படும் குணம் எது என்பதை அறியுங்கள். முகப்பரு, எவ்வளவு அழுத்தி வாரினாலும் படியாத தலைமுடி, கூட்டமாக மனிதர்களைப் பார்த்தால் கூச்சப்பட்டு தலைகவிழ்ந்து கொள்வது என ஏதாவது ஒரு விஷயம் உங்களை தன்னம்பிக்கை இல்லாதவராக ஆக்கியிருக்கும். உங்கள் தாழ்வு மனப்பான்மைக்கு எது காரணமோ, அதற்கு ஒரு பெயர் வையுங்கள். அந்தப் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, துண்டு துண்டாக கிழித்துப் […]

Read More
தன்னம்பிக்கையை செதுக்கும் 6 வழிகள்!

வாள் கலை! ஜப்பானிய சாமுராய் வீரர்களைக் கேட்டால், ‘‘போரும் காதலும் ஒன்றுதான்’’ என்பார்கள். போரில் மனிதர்களை வெல்ல வேண்டியிருக்கிறது; காதலில் மனித மனங்களை வெல்ல வேண்டியிருக்கிறது. போர்முனைக்கு ஒரு வீரன் எடுத்துச் செல்லும் வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதே ஒரு மாபெரும் கலை. தன்னிகரற்ற வாள் சண்டை வீரரும், புகழ்பெற்ற ஜென் துறவியுமான தலான், இதுபற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது நிஜத்தில் வாள் சண்டைக்கான கையேடு இல்லை; வாழ்க்கைக் கையேடு! தன்னம்பிக்கையை வளர்க்கும் அந்தக் கையேட்டிலிருந்து […]

Read More
தன்னம்பிக்கை பெற 10 படிகள்

1 நம்பிக்கையோடு நிமிர்ந்து அமருங்கள்; நில்லுங்கள்; நடந்து செல்லுங்கள்! 2 அடுத்தவர்களை கண்கள் பார்த்து, புன்சிரிப்போடு எதிர்கொண்டு, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். 3 ‘கச்சிதமான உடலமைப்பு இதுதான்’ என விளம்பரங்களும் டெலிவிஷனும் சொல்வதை நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்கள் கச்சிதம்தான்! 4 குடும்பமும் நண்பர்களும் உங்கள்மீது வைக்கும் எதிர்பார்ப்புகளைத் தூக்கி எறிந்துவிடுங்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். 5 சின்னச்சின்னதாக இலக்குகளை வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை எட்டும்போது பெரும் சந்தோஷத்தை உணர்வீர்கள். 6 உங்கள் நம்பிக்கைகளை கேள்வி […]

Read More
தூக்கி எறிந்து விடுங்கள்!

பல ஆண்டு காலம் தங்கள் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு முதிய தம்பதியைப் பார்க்க அவர்கள் ஒரு வார இறுதியில் குடும்பத்தோடு கிளம்பினர். தொலைதூர கிராமத்தில், பண்ணை வீடு ஒன்றில் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர் அந்தத் தம்பதி. இவர்களைப் பார்த்ததும் அந்தத் தம்பதிக்குத் தாள முடியாத சந்தோஷம். தங்கள் சொந்த மகனும் மருமகளும் பேரன், பேத்தியோடு வந்தது போலவே கருதி உபசரித்தனர். தோட்டத்தில் இளநீர் பறிக்கச் சொல்லிக் குழந்தைகளுக்குக் கொடுத்து, அவர்களோடு விளையாடினார் தாத்தா. […]

Read More
உலகை மாற்ற...

அதிகாலையில் கடற்கரை மணலில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். குட்டிக் குட்டி அலைகள் வந்து அவர் கால்களை நனைத்து நனைத்து விளையாடிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு பெரிய அலை வந்ததில் அவர் மிரண்டு போய் நகர்ந்தார். அந்த அலையில் நூற்றுக்கணக்கான குட்டி குட்டி மீன்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு மணலில் ஒதுங்கியிருந்தன. தண்ணீர் இல்லாததால் அவை துடித்துக் கொண்டிருந்தன. அடுத்து ஒரு பெரிய அலை வந்தால் அவை சுலபமாகக் கடலுக்குள் போய்விடலாம். ஆனால் அது சாத்தியமில்லை […]

Read More
crossmenu