மதிப்பிற்குரியவர்களுக்கு...15

வணக்கம். ‘பிறை நிலாவைப் பார்த்து, இரண்டு பக்கமும் குறுகி இருக்கிறது என்கிறார்கள். இல்லை, அது இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கிறது’ என்று இக்பால் என்கிற கவிஞர் எழுதி இருந்தார். ரொம்ப நேரம் மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்த சிந்தனை இது. எல்லாமே நாம் பார்க்கிற பார்வையில்தான் இருக்கு. ‘கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் அங்கு இல்லை.. கடவுள் மட்டும் தெரிந்தால் அது கல்லாய் இருக்க வாய்ப்பில்லை’னு நம் முன்னோர்கள் தெளிவாச் சொல்லிட்டுப் போன விஷயம்தான்.   எந்த விஷயத்திலேயும் நல்லதும் […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...14

வணக்கம். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்றாவது கை, நம்பிக்கை’ என்பார்கள். இரண்டு கைகள் இல்லாமல்கூட நம்மால் வாழ்ந்து விடமுடியும். நம்பிக்கையில்லாமல் வாழ்க்கை இல்லை. ‘‘நாளை சந்திக்கிறேன்’’ என்ற வார்த்தைகளே நம்பிக்கையிலிருந்து பிறப்பவைதான். நிச்சயமற்ற மனித வாழ்வின் ஆணிவேராக இருப்பது, ‘நாளை எல்லாம் மாறும்’ என்ற தீவிர நம்பிக்கைதான். தலைமுறை தலைமுறையாக ஒரு சமூகம் பின்பற்றி வரும் பல்வேறு விதமான நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால், அதில் பல அர்த்தப்பூர்வமான காரணங்கள் ஒளிந்திருக்கும். ‘புதிதாகத் திருமணமான தம்பதி, ஆடி மாதம் ஒன்றாக […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு..13

வணக்கம். எங்கள் நிறுவனத்தில் ஒரு இளைஞர் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்தார். மார்க்கெட்டிங்கிற்குப் புதிதாக வந்திருக்கும் அந்த இளைஞரிடம், ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த வேலையைக் குறித்த நேரத்திற்குள் அவரால் செய்து முடிக்க முடியவில்லை. ‘ஏன் என்னால் நேரத்திற்கு இந்த வேலையைச் செய்ய முடியவில்லை’ என்று காரணங்களை அடுக்கியபோது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘அவரைப் போல் மற்றவர்கள் யாரும் பொறுப்போடு இல்லை’ என்பதே அவரின் ஆதங்கம். வெற்றி பெறும்போது அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று நினைப்பதும், […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...12

வணக்கம். பேச்சு என்பது கருத்துகளை பரிமாற உதவும் கருவி மட்டும் அல்ல; அது மனிதனின் தனித்த அடையாளம். கலைகளுள் தலைசிறந்த கலை. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று சொல்வார்கள். அதன் அர்த்தம், ‘பேசத் தெரிந்த பிள்ளை எளிதில் ஜெயிக்கும்’ என்பதுதான். முருகன் மயிலேறி உலகம் சுற்றி வருவதற்குள், பிள்ளையார் ‘பெற்றோரே என் உலகம்’ என்று சொல்லி அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தை வாங்கியே விட்டார். பேச்சு என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி. சரியாகப் பயன்படுத்த தெரியாமல் போனால், […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...11

வணக்கம். இன்றைய காலகட்டத்தின் முக்கியமான தேவை, உதாரண புருஷர்கள். ‘இவரைப் போல வாழ வேண்டும்’ என்று தூண்டுகிற நல்ல மனிதர்கள்தான் இந்த உலகத்தின் சொத்து. யாரை நாம் ரோல் மாடலாக நினைக்கிறோமோ, அதுவே நாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், அறிஞர்கள், ஆன்மிக வாதிகள் என நம் குழந்தைகளுக்கு சிறந்தவர்களை முன்னுதாரணமாக அடையாளம் காட்டினால், அவர்கள் வாழ்க்கை சிறக்கும். உலகம் தழைக்கும். நான் என் வாழ்வில் ‘ரோல் மாடல்’ என நினைக்கும் மாமனிதர், திரையுல மார்க்கண்டேயர் நடிகர் சிவகுமார். […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...10

வணக்கம். ‘பணக்காரன் ஆக என்ன செய்யவேண்டும்?’ என்ற கேள்விக்கான பதிலாக, ‘தேவையைக் குறைத்துக்கொள். நீ எப்போதும் பணக்காரன்தான்’ என்று எங்கோ படித்த விஷயம் அப்படியே மனதில் கல்வெட்டாக பதிந்துவிட்டது. ‘ஈஸ்வரன்’ என்ற சொல், அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய சிவனின் பெயர். ஆக்கமும், அழிவும் தரக்கூடிய இரண்டு நிலைகளுக்கு ‘ஈஸ்வரன்’ என்ற அடைமொழி நம் மரபில் உண்டு. தொட்டதெல்லாம் துலங்கி, கோடி ரூபாய் வைத்திருப்பவனை ‘கோடீஸ்வரன்’ என்று சொல்வார்கள். அனைத்து சக்திகளையும் உள்ளடக்கியது பணம் என்று குறிப்பிடுவதுபோல, பணம் […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...9

வணக்கம் ’ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் தொழிலாளர்கள், உறுதுணையான டீலர்கள் மற்றும் ஏஜென்டுகள், நம்பிக்கை மிகுந்த வாடிக்கையாளர்கள் என எங்கள் நிறுவன வளர்ச்சி ஒரு உறுதியான சங்கிலியைப் போல, ஒருவர் கையை ஒருவர் கோர்த்து நிற்கும் வலுவான பிணைப்பு. நல்ல பாதையில் தொடர்ந்து நடக்க இந்தப் பிணைப்பே எனக்குத் தூண்டுகோலாக அமைகிறது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், எதிர்படும் ஒவ்வொருவரையும் பார்த்ததும் ‘வாழ்க வளமுடன்’ என்று மனதார வாழ்த்தி, நேர்மறை எண்ணங்களுடனே எதிர்கொள்கிறோம். ‘நெகட்டிவ் எண்ணங்கள்’ மனதில் தங்காமல் […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...8

வணக்கம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆசையாக இருந்த அனைத்தும் அத்தியாவசியத் தேவையாகி விட்ட காலம் இது. நம்பரைச் சுழற்றி தொலைபேசியில் பேசுகிற அனுபவம், பிறவி பணக்காரருக்கு மட்டுமே வாய்ப்பு. அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் தொலைபேசி இருந்த காலத்தில், ‘இந்தா போன் பண்ணிக்கோ’ என்று யாராவது வாய்ப்பு தந்தாலும், மறுமுனையில் அழைத்துப் பேச பெரும்பாலானவர்களுக்கு ஆள் இருக்காது. ஒரு பணக்காரர் இன்னொரு பணக்காரரை மட்டுமே அழைக்க முடியும். இன்று வீட்டிற்கு குறைந்தது நான்கு செல்போன்களாவது இருப்பது நிதர்சனம். தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு - 7

வணக்கம். ‘பிள்ளைகளுக்காகத்தானே இந்த வாழ்க்கை’ என்று மெழுகாக தங்களை உருக்கிக்கொள்ளும் பெற்றோர்களை ஏழை முதல் பணக்காரர்கள் வரை எந்த நிலையிலும் பார்க்கலாம். கல்யாணப் பந்தியில் பரிமாறப்பட்ட இனிப்பு தன் மகனுக்கு மிகவும் பிடிக்கும் என்று சாப்பிடாமல் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட தாயைப் பார்த்தபோது ஆச்சர்யப்பட்டேன். குழந்தை நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக மனைவியையும் குழந்தையையும் சென்னையில் விட்டுவிட்டு, வெளியூரில் வீடு வாடகை எடுத்து தனியாக வாழும் தகப்பன்களைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். குழந்தைகள் விரும்புகின்றவற்றை தேடித் தேடித் […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு - 6

வணக்கம். ‘நீங்க ஏன் ஒரு சாமியாரை உங்க விளம்பரங்களில் எல்லாம் போடுறீங்க?’’ என்று ஒருவர் என்னிடம் கேட்டார். நான் குருவாக ஏற்றுக் கொண்ட ‘வேதாத்திரி மகரிஷி’ அவர்களைத்தான், கேள்வி கேட்டவர் ‘ஒரு சாமியார்’ என்று குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய வாழ்வையும், ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சியையும் ‘மகரிஷிக்கு முன்’ - ‘மகரிஷிக்குப் பின்’ என இரண்டு கட்டங்களாகப் பிரிக்க இயலும். அப்பா, அம்மா சொல்படி கேட்டு நடந்துகொள்கிற பிள்ளை நம் சமூகத்தில் சமத்துப் பிள்ளை. […]

Read More
crossmenu