தினம் ஒரு கதை - 131

கல்லூரியில் படித்து முடித்து விட்டு வேலை தேட ஊரிலிருந்து சென்னை வந்திருந்தான் அந்த இளைஞன். சென்னையில் அவன் தாய் மாமா மளிகைக்கடை வைத்திருந்தார். வேலை தேடப் போகும் நேரம் போக மற்ற நேரங்களின் மாமாவின் கடையில் உதவி செய்தான். அது சின்ன கடைதான். பல சரக்கு சாமான்களும் காய்கறிகளும் விற்கும் சில்லரை வியாபாரக் கடை. மாமாவும் அத்தையும் கடையை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆரம்பப் பள்ளி செல்லும் குழந்தைகளும் உண்டு. கடையில் இருக்கும்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த […]

Read More
தினம் ஒரு கதை - 130

ஜப்பான் தேசத்தில், நூறு வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறுவன் வகுப்பறையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு வயது எட்டுக்குள் இருக்கும். அந்த வயதில் அவனுக்கு பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் மிகப்பெரிய வெறுப்பு இருந்தது. ஆசிரியர்கள் என்றாலே பயமுறுத்தும் உயிரினங்கள் என்றே அவன் அகராதியில் இருந்தது. அன்று புது ஓவிய ஆசிரியர் டாய்ச்சிகோவா வருகிறார் என்று அனைவரும் பரபரப்பாக இருந்தனர். இவனும் டாய்ச்சிகோவாவை பயத்துடன் எதிர்பார்த்திருந்தான். ஆசிரியர் டாய்ச்சிக்கோவா உள்ளே வந்தார். மாணவர்கள் எழுந்து பணிந்தார்கள். அனைவரையும் அவர் அமரச் […]

Read More
தினம் ஒரு கதை - 129

இரண்டு நண்பர்கள் வயல்வெளியைப் பார்த்துக்கொண்டே நடந்து வந்து அமர்ந்தனர். அவர்கள் இருவரும் தங்களை அறிவுப்பூர்வமாக விவாதம் செய்யும் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள் மட்டும்தான். வயல்வெளியில் விவசாயி கடுமையாக உழைப்பதை பார்த்துக் கொண்டே பேசினார்கள். ‘‘விதை இல்லாமல் ஏது நெற்கதிர்கள்? நெற்கதிர்கள் இல்லாமல் நெல் ஏது? நெல் இல்லாமல் அரிசி ஏது? அரிசி இல்லாமல் உணவு ஏது? உணவில்லாமல் நீயும் நானும் ஏது? நான் இல்லாவிட்டால் உலகு ஏது?’’ என்று ஒருவர் வியாக்கியானமாய் […]

Read More
தினம் ஒரு கதை - 128

பதின் பருவத்தில் நுழைய இருக்கும் அந்தப் பள்ளிச் சிறுமி அன்று முழுவதும் டி.வி பார்த்துக்கொண்டே இருந்தாள். காலை முதல் மாலை வரை டி.வி.யில் ஒரு நிகழ்ச்சியைக்கூட விடவில்லை. புதிதாய் சேர்ந்திருக்கும் பேஸ்கட் பால் பயிற்சிக்குக்கூட மாலையில் போகவில்லை. அம்மா இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவர் ஏதும் கேட்கவில்லை. ஆனால் இரவிலும் மகள் டி.வி பார்த்துக் கொண்டிருப்பதை அவரால் தாங்க முடியவில்லை. ‘‘ஏன்மா இன்னைக்கு விளையாடவே போகலை?’’ ‘‘இனிமே எனக்கு விளையாட்டு செட் ஆகாதும்மா’’ என்றாள் மகள். ‘‘ஏன்?’’ ‘‘நேத்து […]

Read More
தினம் ஒரு கதை - 127

ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அந்த இளைஞன், தன்னுடன் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவரைக் காதலித்தான். முதலில் தயங்கியவன் பிறகு தைரியத்தை வளர்த்துக் கொண்டு தன் காதலைச் சொல்லிவிட்டான். அவள் அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம் அவன் காதலைச் சொன்னதைக் குற்றமாகவும் கருதவில்லை. ‘‘நீங்கள் காதலிப்பது உங்கள் உணர்வு. ஆனால் எனக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு உங்கள் மேல் எந்தக் காதல் உணர்வும் இல்லை’’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டாள். இதைக் கேட்டு […]

Read More
தினம் ஒரு கதை - 126

உயர்கல்வி படிப்பதற்காக சிறு நகரம் ஒன்றிலிருந்து சென்னை வந்தார் அந்த இளம்பெண். ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் அறை எடுத்து தங்கிக் கொண்டார். தினமும் காலையில் எழுந்து ஹாஸ்டலில் கொடுக்கும் உணவை உண்டு விட்டு கல்லூரி செல்ல ஆரம்பித்தார். அங்கே பல ஆண், பெண் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் மிக கண்ணியமாக பழகினார்கள். இவரும் கண்ணியமாகப் பழகினார். இரண்டு மாதங்கள் வாழ்க்கை சிறப்பாக சென்றது. அதன்பிறகு இரவுகளில் தனிமையும் வெறுமையும் வாட்ட ஆரம்பித்தது. இரவு  எட்டரை மணிக்கு சாப்பிட்டு […]

Read More
தினம் ஒரு கதை - 125

ஒரு நிறுவனத்தில் ஐந்து இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். அதில் ஓர் இளைஞன் மட்டும் வேலையில் ஆர்வமில்லாமல் இருந்தான். அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மேலதிகாரி அவனுக்கு ஊக்கமான வார்த்தைகள் பலவற்றைச் சொன்னார். வேலையை எளிமையாகப் புரியும்படி கற்றுக் கொடுத்தார். ஆனாலும் அவன் பெரிய ஆர்வம் காட்டவில்லை. உற்சாகம் இல்லாமலேயே இருந்தான். ஒருநாள் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்தான். இவர் காரணத்தை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு, சட்டென்று ராஜினாவை ஏற்றுக் கொண்டார். ராஜினாமா கடித்தத்தில் இவர் அப்ரூவல் கையெழுத்தை இட்டு மேற்படி […]

Read More
தினம் ஒரு கதை - 124

ஒரு தெருவில் 36 வயது ஆணும் 34 வயது பெண்ணும் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இருவருமே காதல் தோல்வி அடைந்தவர்கள். அதனாலேயே திருமணம் செய்யாமல் இருந்தார்கள். மனிதர்களின் அன்பு மீது நம்பிக்கை இழந்தவர்கள். ஆண் தன் வெறுமையிலிருந்து மீள ஒரு பொமேரியன் நாய் வளர்த்தான். பெண் தன் வெறுமையில் இருந்து மீள நிறைய புத்தகமாய் படித்து வந்தாள். ஒரே தெருவில் இருந்த காரணத்தால், இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள்தான். ஆனால் ஒருவர் […]

Read More
தினம் ஒரு கதை - 123

கழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. கழுகு அந்த மேகத்துக்கு அருகே வந்து, ‘‘ஏன் நீ மட்டும் நகராமல் கஷ்டப்பட்டு காற்றை எதிர்த்து இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டது. ‘‘ஓர் உயிருக்கு ஆபத்து. அதனால் கலங்கிப் போய், அதைக் காப்பாற்ற இங்கேயே நிற்கிறேன்’’ என்றது. ‘‘யாருக்கு ஆபத்து? என்னிடம் […]

Read More
தினம் ஒரு கதை - 122

அலெக்சாண்டர் உலகையே வெற்றி கொண்டு, இந்தியாவின் வட பகுதியையும் வெற்றி கொண்ட கர்வத்தில் குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். அவர் மனம் பெருமையால் நிறைந்து இருக்கிறது. குதிரையில் தனியாக அமர்ந்து சவாரி செய்தபடி தன்னைத்தானே மனதுக்குள் மெச்சிக் கொண்டு போவது அலெக்சாண்டருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. 16 வயதில் தன் தந்தை மன்னர் பிலிப் அவரை ராணுவத்தில் சேர்த்துக் கொண்டது, 17 வயதில் தீபனியர்களை வியூகம் அமைத்து வெற்றி கொண்டு அவர்கள் நகரத்துக்குள் பீடுநடை போட்டுச் சென்றது என எல்லாவற்றையும் […]

Read More
crossmenu