*காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். *குறைந்தது தினமும் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் நீண்ட நேரம் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. பசியை வளர்த்தால், அது அளவுக்கு அதிகமாக நம்மை சாப்பிட வைக்கும். *உடல் பருமனுக்கு முக்கியக் காரணம் அரிசிச் சாதம். உங்கள் உணவில் சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு […]
நாம் அதிகம் ஆசைப்பட்டுக் கேட்பது நேரத்தைத்தான்; வீணாக அதிகம் செலவழிப்பதும் அதைத்தான்! - வில்லியம் பென்
அதிகாலையில் கடற்கரை மணலில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். குட்டிக் குட்டி அலைகள் வந்து அவர் கால்களை நனைத்து நனைத்து விளையாடிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு பெரிய அலை வந்ததில் அவர் மிரண்டு போய் நகர்ந்தார். அந்த அலையில் நூற்றுக்கணக்கான குட்டி குட்டி மீன்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு மணலில் ஒதுங்கியிருந்தன. தண்ணீர் இல்லாததால் அவை துடித்துக் கொண்டிருந்தன. அடுத்து ஒரு பெரிய அலை வந்தால் அவை சுலபமாகக் கடலுக்குள் போய்விடலாம். ஆனால் அது சாத்தியமில்லை […]
நேரம்தான் உங்கள் வாழ்க்கை; நேரத்தை வீணடிப்பது உங்கள் வாழ்க்கையை வீணடிப்பது போன்றது! ஆலன் லேகெயின்
சில நேரங்களில் நெருங்கிய உறவுகளே எரிச்சல் தருவார்கள். ‘என்னடா வாழ்க்கை இது’ என விரக்தி அடைய வேண்டாம். ‘பாசிட்டிவாக யோசித்தால் அந்த நினைப்பிலிருந்து சுலபமாக மீண்டு வரலாம்’ என்கிறார்கள் நிபுணர்கள். அப்படிச் சில நேர்பட யோசனைகள்... இரவெல்லாம் ஓவராகக் குறட்டை விடும் கணவர், வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் பாடாய்ப் படுத்துகிறாரா? எரிச்சலோடு அரைத் தூக்கத்தில் அவரைத் திட்டாமல் சந்தோஷப்படுங்கள். இரவெல்லாம் கண்ட நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஊர் சுற்றாமல், டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு எங்கோ ரோட்டோரம் விழுந்து கிடக்காமல், […]
அனுபவத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறவர்கள், எப்போதுமே நேரத்தை விரயம் செய்வதில்லை. -ரோடின்
விமான நிலையத்தில் காத்திருந்தாள் அவள். விமானத்தில் ஏறத் தாமதம் ஆகும் என்பது தெரிந்ததும் ஒரு புத்தகமும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தாள். பக்கத்து நாற்காலியில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்து, அவனும் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். இருவருக்கும் இடையே கைப்பிடியில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து அவள் ஒரு பிஸ்கெட்டை எடுத்தாள். அவனும் ஒன்று எடுத்தான். உடனே அவளுக்குக் கோபம் வந்தது. ‘என்ன தைரியம் இருந்தால் நான் வாங்கி வைத்திருக்கும் பாக்கெட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுப்பான்? வேறு இடமாக […]
எந்த சூழலிலும் உண்மை பேசுவதும், பெரியோரையும் பெற்றோரையும் மதித்து அன்பு செலுத்துவதும் மகாத்மா கற்றுத் தந்த அடிப்படைப் பாடங்கள். பள்ளி வயதிலேயே இதையெல்லாம் அவர் கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். தன் வாழ்க்கை வரலாறான ‘சத்திய சோதனை’ நூலில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் தங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்கள் எதையேனும் படித்தால் பல பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்படிப் படிக்க விடாமல் தடுக்கின்றனர். நல்ல கருத்துகளைச் சொல்லும் காட்சிகளையும் குழந்தைகள் பார்க்க […]
அரசாங்கம் ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் போட்டு செலவழிப்பதைப் போலவே நாமும் வீட்டில் மாதா மாதம் பட்ஜெட் போட்டுச் செலவுகளைக் கண்காணிப்பது அவசியம். அரசாங்கம் போடும் பட்ஜெட்டைப் பார்க்கும்போது எது அவசியம், எது அநாவசியம் என நமக்குத் தெரிகிறது. நாம் அதை விமர்சனமும் செய்கிறோம். வீட்டு பட்ஜெட்டிலும் இதை நாம் பார்க்க வேண்டாமா?
நேரம் என்ற பள்ளியில்தான் நாம் எல்லோரும் படிக்கிறோம்; நேரம் என்ற நெருப்பில்தான் நாம் எல்லோரும் எரிகிறோம். -டெல்மோர் ஷ்வார்ட்ஸ்