ஒவ்வொரு புதிய நாளின் காலைப்பொழுதிலும் நீங்கள் வீட்டுக்கு வெளியில் காலடி எடுத்து வைக்கும்போது, உங்கள் மனதுக்குள் தோன்றும் நினைப்பு என்ன? ‘சூரியன் உலகையே பிரகாசமாக்கி வைத்திருக்கிறது... எங்கும் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது... நாமும் இந்த உற்சாக நதியில் நீந்த வேண்டும்’ என நீங்கள் நினைத்தால் ஓகே! ஆனால் அதற்கு பதிலாக, ‘காலையிலயே இவ்வளவு புழுக்கமா இருக்கே. என்ன கொடுமை இது... இந்த நாளை எப்படி ஓட்டுவது? வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள் ஒருவழி ஆகிவிடுவோம் போலிருக்கிறதே’ என […]
உலகத்தில் எல்லோருக்கும் சொந்தமானது நேரம்தான். ‘என்னிடம் எதுவுமே இல்லை’எனப் புலம்புகிறவனிடம் கூட ஏராளமான நேரம் இருக்கிறது. -பல்தசார் கிரேஸியன்
அந்தப் பிரபல ஹோட்டலுக்கு வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கினான் ஒரு இளைஞன். அவன் கூடவே காரிலிருந்து இறங்கியது ஒரு நெருப்புக்கோழி. இருவரும் ஒரு டேபிளில் சாப்பிட உட்கார்ந்தார்கள். உணவு பரிமாற ஓர் இளம்பெண் வந்து வணங்கி நின்றாள். மெனு கார்டைப் பார்த்துவிட்டு, சூப், சாப்பாடு, ஐஸ்கிரீம் என அவன் வரிசையாக ஆர்டர் செய்தான். ‘‘ஆமாம்... ஆமாம்... எனக்கும் அதுவே வேண்டும்’’ என்றது நெருப்புக்கோழி. இருவரும் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். பில் வந்தது. 1640 ரூபாய். அவன் ஏதாவது […]
சி.முருகேஷ் பாபு ‘கையிலே வாங்கினேன்... பையிலே போடலை... காசு போன இடம் தெரியலை’ என்கிற ரேஞ்சில்தான் வருமானமும் செலவுகளும் இருக்கின்றன என்று சலித்துக் கொள்கிறீர்களா? வரவையும் செலவையும் எழுதிப் பார்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். எழுதிப் பார்த்துச் செலவழிக்க நாம் என்ன நிதியமைச்சர் ப.சிதம்பரமா என்று கேட்கிறீர்களா... அவர் நாட்டுக்கு நிதியமைச்சராய் இருந்தவர் என்றால் நீங்கள் வீட்டுக்கு நிதியமைச்சர்தான்! அதனால் நீங்கள் பட்ஜெட் போடுவதில் தவறில்லை! நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது அவருக்கு ஆலோசனை சொல்லப் பெரிய […]
தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒருநாள் தனிமையில் இருந்தபோது அவரை நெருங்கி வந்தார் ஒரு பெரிய மனிதர். சாக்ரடீஸுக்கு நன்கு அறிமுகமானவர்தான் அவர். பதற்றத்தோடு சுற்றும்முற்றும் பார்த்த அவர், ‘‘நீங்க ரொம்ப நம்பிக்கிட்டு இருக்கீங்களே... உங்க நண்பர், அவர் என்ன செய்தார் தெரியுமா?’’ என்று ஆரம்பித்தார். “இருங்க... இருங்க...” என அவர் பேச்சை இடைமறித்தார் சாக்ரடீஸ். ‘‘சம்பந்தமில்லாத இன்னொருத்தர் பத்திப் பேசும்போது, எப்பவுமே மூன்று சோதனைகளைச் செய்து பார்த்துக்கிட்டு அப்புறமா பேசறது நல்லது’’ என்றவர், ‘‘இப்போ முதல் சோதனைக்கு […]
அது நல்ல நேரமோ, கெட்ட நேரமோ... இந்த நேரம் நம்முடைய நேரம் என நினைத்து எதையும் செய்யுங்கள். ஆர்ட் புச்வால்ட்
பணத்தை உழைத்து மீட்கலாம்; இழந்த அறிவைப் படித்துமீட்கலாம்; இழந்த உடல்நலனை மருந்துகளால் மீட்கலாம். இழந்த நேரம் இழக்கப்பட்டதுதான்! - சாமுவேல் ஸ்மைல்ஸ்
