இன்று ஒன்று நன்று!

நாம் ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடும் போது, நேரம் மிகவேகமாக நம்மைத் தாண்டி நகர்கிறது! செனகா

Read More
தினம் ஒரு கதை - 11

நாட்டில் திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவில் ஒரு பயில்வான் வித்தை காட்டுகிறார். இரும்புக் கம்பியை கையால் வளைத்துக் காட்டுகிறார். கருங்கல்லைக் கையால் உடைக்கிறார். முடிவில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சக்கையை மட்டும் மிச்சம் வைக்கிறார். ‘‘இந்த எலுமிச்சை பழ சக்கையிலிருந்து மேலும் ஒரு துளி எலுமிச்சை சாறை யாராவது பிழிந்து விட்டால் அவருக்கு 100 பொற்காசுகள் தருகிறேன்’’ என்று சவால் விடுகிறார் பயில்வான். ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வந்து பிழிகிறார்கள். சாறு வரவில்லை. பலசாலிகள் […]

Read More
காந்தி சினிமா!

தன் வாழ்நாள் முழுக்க சினிமாவை வெறுத்த காந்தியின் வாழ்வைப் பற்றி மூன்று முக்கியமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பற்றிய முதல் படத்தை எடுத்தவர் ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர், ஏ.கே.செட்டியார். 1937ம் ஆண்டு தொடங்கி பல நாடுகளைச் சுற்றி, ஏராளமான தகவல்களையும் துண்டு துண்டு சலனப்படங்களையும் சேர்த்து ‘காந்தி’ படத்தை உருவாக்கிய இவருக்கு அதனாலேயே ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்ற பெயர் கிடைத்தது. ஏ.கே.செட்டியார் ஒருமுறைகூட காந்தியிடம் நேரடியாக பேசியதில்லை. […]

Read More
இன்று ஒன்று நன்று!

வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசத்தை மூன்றே வார்த்தைகளில் பிரித்துவிடலாம்... ‘‘எனக்கு நேரம் இல்லை!’’ -  ஃபிராங்க்ளின் ஃபீல்ட்

Read More
தினம் ஒரு கதை - 10

ஒரு பறவை காலை முதல் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. எங்குமே கிடைக்கவில்லை. நெடு நேரம் தேடிய பிறகு மரத்தின் அடியில் சில பெர்ரி பழங்கள் விழுந்து கிடந்ததைப் பார்த்தது. ஆசையுடன் அவற்றைக் கொத்த கீழே இறங்கும்போது, எங்கிருந்தோ பெரிய பூனை ஒன்று பறவை மீது பாய்ந்தது. பூனையிடமிருந்து தப்பித்து இரை தேடப் போகும்போது பாம்பொன்று துரத்தியது. பசியில் இருந்த பறவைக்கு உயிர் பயமும் வர, மேலே மேலே பறந்தது. மிருகங்கள் இல்லாத இடமாக, பாம்புகள் இல்லாத […]

Read More
எனவே பசித்திருங்கள்!

- ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபாட், ஐபேட், ஐபோன் என உள்ளங்கைக்குள் கம்ப்யூட்டரைக் கொண்டுவந்து தொழில்நுட்பப் புரட்சி செய்த ‘ஆப்பிள் கம்ப்யூட்டர்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது. அவரது கண்டுபிடிப்புகளைவிட புகழ்பெற்றது, கடந்த 2005ம் ஆண்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அவர் நிகழ்த்திய உரை. மிகச்சிறந்த தன்னம்பிக்கை உரமேற்றும் அந்தப் பேச்சு, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் எனர்ஜி டானிக். அந்த உரையின் சுருக்கம் இதோ... ‘‘கல்லூரிப் படிப்பை பாதியில் தலைமுழுகியவன் நான். […]

Read More
தினம் ஒரு கதை - 9

நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் முன்பு தயக்கத்துடன் நின்றார்கள். ‘‘சார், உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும். நீங்க முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பை கவனித்து, குறிப்பு எடுத்ததைப் பார்த்தோம்...’’ அந்தக் கல்லூரியில் வகுப்புகள் உரைகளாகத்தான் நடக்கும். யார் வேண்டுமானாலும் எந்த வகுப்பிலும் போய் உரைகளைக் கேட்டுக் கொள்ளலாம். ‘‘ஆம், எனக்கொரு சந்தேகம் அதனால் போய் கற்றுக்கொண்டேன்’’ என்றார் கல்லூரி முதல்வர். ‘‘நாங்களே முதலாம் ஆண்டு வகுப்புகள் எதையும் கவனிக்க மாட்டோம். ஏன், மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்குக்கூட […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...4

‘நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்?’ - இந்தக் கேள்விக்கு ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என்று பள்ளி மாணவர்கள்கூட பதில் சொல்லிவிடுவார்கள். ‘நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா’ என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன்பு, தன் காலடி தடத்தைப் பதித்து வரலாற்றில் இடம் பெற்றிருக்க வேண்டியவர் எட்வின் சி.ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்கை சுமந்து சென்ற அப்பல்லோ விண்கலத்தின் […]

Read More
இன்று ஒன்று நன்று!

உங்கள் மதிப்பை நீங்கள் உணராதவரை, உங்கள் நேரத்தின் மதிப்பை உணரமுடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணராதவரை, உங்களால் அதைவைத்து எதுவும் செய்ய முடியாது. - ஸ்காட் பேக்

Read More
1 30 31 32 33 34 39
crossmenu