குரு ஒருவர் சீடர்களோடு நடை பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு நாய் தாகத்தில் மயக்கமாகி, மூச்சிரைத்துக் கிடந்தது. ஒரு சொட்டு நீரை யாராவது அதன் வாயில் ஊற்றி விட மாட்டார்களா என்று காத்துக் கிடந்தது. அதைப் பார்த்த குரு தன் சீடர்களிடம், ‘‘அருகில் ஒரு கிணறு இருக்கிறது. அதிலிருந்து யாராவது நீர் எடுத்துவந்து அதன் தாகம் தணியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டார். கிணற்றில் நீர் எடுக்கப் போன சீடர்கள், அந்த இடத்தில் ஏதோ விவாதித்துவிட்டுத் […]
மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக்கூடாதென்று நினைக்கிறாயோ, அதை நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே.
ஒருவர் விடுமுறையன்று வீட்டுத் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அங்கே ஒரு கிளியை கழுகு துரத்துவதைப் பார்த்தார். கிளி அங்கும் இங்கும் பறந்து தப்பிக்க கடும் முயற்சி செய்தது. கழுகு விடவில்லை. வேறு வழியே இல்லாமல் அவர் கையில் வந்து அமர்ந்தது கிளி. அவர் கழுகை விரட்ட, கழுகு பயந்து பறந்தோடிவிட்டது. கிளியை அன்புடன் பார்த்து, ‘‘கிளியே! நான் இருக்கிறேன் உனக்கு’’ என்று சொல்லி, குடிக்க பாலும், சுவைக்க பழங்களும் கொடுத்தார். பிறகு, ‘‘நீ என்னுடன் இருந்து விடு […]
அமெரிக்க அரசியல் மேதையும் பல்துறை வல்லுநருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு செய்தி நிறுவனம் நடத்தினார். அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்றைப் புரட்டிய வாடிக்கையாளர், அதன் விலையை அங்கிருந்த ஊழியரிடம் கேட்டார். ‘‘ஒரு டாலர்’’ என்றார் அவர். விலையைக் குறைக்க சொல்லி வாடிக்கையாளர் நெடு நேரம் அர்த்தமில்லாமல் பேரம் பேசினார். ‘‘இது தரமான புத்தகம். ஒரு டாலருக்குக் கீழே விலையைக் குறைக்க முடியாது’’ என்றார் ஊழியர். ‘‘உங்கள் முதலாளியைக் கூப்பிடுங்கள். அவரிடம் பேரம் பேசிக் கொள்கிறேன்’’ என்று […]
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதீர்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
மிகச்சிறிய அந்த நகரத்தில் மக்கள் உற்சாகமாக வாழ்ந்து வந்தனர். அங்கு யாருமே ஏழைகள் இல்லை; எல்லோருமே மாட மாளிகைகளில் வாழ்ந்தனர். பரம்பரை சொத்துகளுக்கும் தினசரி வருமானத்துக்கும் எப்போதும் குறைவில்லாத வாழ்க்கை. விதம்விதமான உணவுகளை சாப்பிட்டு, தினம் ஒரு கேளிக்கையில் ஈடுபட்டு சந்தோஷமாக இருந்தனர் எல்லோரும்! மாற்றம் என்பதுதானே மாறாத இயற்கை நியதியாக இருக்கிறது. விடுதிகளில், பூங்காக்களில் அடிக்கடி கூடிப் பேசும்போதுதான் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை இருப்பது புரிந்தது. ‘மகன் படிப்பதில்லை...’, ‘மகள் சொன்ன பேச்சை மதிப்பதில்லை...’, […]
ஆந்தை சூட்கேஸில் எல்லாவற்றையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த கழுகு கேட்டது, ‘‘என்ன கிளம்பிவிட்டாய். எங்கே போகிறாய்?’’ ‘‘நான் பக்கத்துக் காட்டுக்குப் போகிறேன்.’’ ‘‘ஏன், இந்த காடு பிடிக்கவில்லையா?’’ ‘‘ஆம். இங்கே இரவு நேரத்தில் நான் அலறுவது பலருக்கும் பிடிக்கவில்லையாம். கிண்டல் செய்கிறார்கள். அதனால் போகிறேன்.’’ ‘‘சரி, பக்கத்துக் காட்டுக்கு போனால் மட்டும் உன் குரல் மாறி விடுமா என்ன?’’ ஆந்தை வெகுநேரம் யோசித்து, ‘‘மாறாதே... அது எப்படி மாறும்? இதே குரல்தான் இருக்கும்’’ […]