நான் இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் செல்வமும் பெருகும் - இப்படிக்கு தன்னம்பிக்கை!
தாத்தா தன் 20 வயது பேரனை அழைத்தார். ‘‘எனக்கு உடம்பு முடியவில்லை. இந்த முறை நம் தோப்பில் சென்று தேங்காய் கொண்டு வர என்னால் முடியாது. நீ மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு போய் வா’’ என்றார். பேரனும் சம்மதித்து வண்டியை எடுத்தான். போகும்போது தாத்தா அவனுக்கு ஏதோ புத்திமதி சொல்ல, அதை காதிலேயே வாங்கவில்லை அவன். ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் இளமை இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. அறிவு இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினான். […]
பெரிய பொழுதுபோக்கு ஷாப்பிங் மால் அது. அங்கே குழந்தைகள் விளையாட்டுப் பிரிவுக்கு ஒன்பது வயது மாணவி போனாள். உடன் அப்பா, அம்மா தம்பி இருந்தனர். உள்ளே குழந்தைகள் விளையாட பிளாஸ்டிக் சறுக்கு, பிளாஸ்டிக் ஊஞ்சல் என்று ஏராளமான குட்டிக் குட்டி பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன. அதில் விளையாட ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய். அந்த மாணவியும் தம்பியும் ஆவலுடன் நுழையப் போனார்கள். காவலாளி வாசலில் மாணவியைத் தடுத்து நிறுத்தினார். உயரம் அளக்கும் அளவையில் அவள் உயரத்தை […]
கைப் பிடித்து நடக்க எத்தனிக்கும் குழந்தையை தானாய் நடக்க வைப்பதில் தொடங்குகிறது தன்னம்பிக்கை பாடம்.
நமது உடலில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் உறுப்பு, கால் மூட்டுக்கள்தான்! உடலின் முழு எடையையும் தாங்குவதால், அது சீக்கிரமே சீரற்றுப் போய் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. முதுமையை நெருங்குபவர்கள் மட்டுமின்றி, எல்லா வயதுகளில் இருப்பவர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்; என்ன, முதியவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக இந்தப் பிரச்னை இருக்கும். நீண்டநாள் உழைப்பும் தேய்மானமும் சிலரை நிரந்தர மூட்டுவலி நோயாளி ஆக்கிவிடும். சிலருக்குக் காயத்தாலோ, தவறான உடற்பயிற்சியாலோ திடீரென மூட்டுவலி ஏற்படக்கூடும். என்ன காரணத்தால் மூட்டுவலி ஏற்படுகிறது என்பதைப் […]
அம்புப் படுக்கையில் இருந்தபடி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தர்மருக்கும் பாண்டவர்களுக்கும் பல உபதேசங்களைச் சொன்னார் பிதாமகர் பீஷ்மர். அதில் ‘ராஜ நீதி’ என அவர் சொல்லியிருக்கும் பல விஷயங்கள், வாழ்க்கையில் வெற்றியை அடையத் துடிக்கும் பலருக்கும் நிர்வாகக் கலை மந்திரங்களாக இருக்கும். * எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது. வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தேவை. இவ்விரண்டில் முயற்சியே மேலானது. ஒருவேளை உன் முயற்சி வீணாய் […]
உலகில் மற்ற எல்லா விஷயங்களையும்விட, அச்சமே நிறைய பேரைத் தோற்கடிக்கிறது.
தவறுகளிலிருந்துதான் புதிய விஷயங்களை மனித இனம் கற்றுக் கொள்கிறது. ஆனால் எல்லா தவறுகளையும் ஒரே மாதிரி பார்க்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ‘‘சில தவறுகளைச் செய்யப் பயப்படத் தேவையில்லை. அவைதான் நம்மை பண்பட்டவர்களாக செதுக்குகின்றன’’ என்கிறார்கள் வாழ்க்கை நலக் கல்வி தரும் நிபுணர்கள். அவை... தப்பானவரிடம் காட்டும் அன்பு: நம் நேசத்தை எல்லாம் கொட்டி உருவாக்கும் ஒரு உறவு தப்பானது என்றால் இதயமே நொறுங்கிப் போய் விடும். ஆறாத் துயரத்தில் கண்ணீர் பெருக்கெடுக்கும். மாதங்கள், வருடங்கள் […]
1. கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம்.எஸ்.சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்காது. வர்கீஸ் குரியன் முடியாது என்று நினைத்திருந்தால், இந்தியா பால்வளத்தில் தன்னிறைவு அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. ‘முடியாது’ என்ற நோய் பல […]
காந்தி ஒற்றை வார்த்தை சொன்னாலும், அதை மந்திரமாக ஏற்று மக்கள் பின்பற்றினார்கள். தன் பேச்சால் இந்தியாவையே கட்டிப் போட்ட காந்தி, இளம் வயதில் கூச்ச சுபாவத்துடன் பேசவே தயங்கும் இளைஞராக இருந்தார் என்பது ஆச்சரியம்.லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். முதல் வழக்குக்காக நீதிமன்றத்தில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. நாக்கு குழறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர், அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டார். ஆனால் தென் ஆப்ரிக்கா சென்றபிறகு அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக […]