ஒரு வர்மக்கலை வல்லுநரிடம் வர்மம் கற்றுக்கொள்ள ஒருவன் விரும்பினான். மிக வேகமாக அக்கலையைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான். ‘‘ஐயா, இக்கலையைக் கற்றுக்கொள்ள முழுமையாக எத்தனை வருடங்கள் ஆகும்?” “பத்து வருடங்கள் ஆகும்” ‘‘நான் வார இறுதியில் ஓய்வு எதுவும் எடுக்காமல் பயிற்சி செய்து கற்றுக்கொண்டால் எவ்வளவு காலம் ஆகும்?” “இருபது வருடங்கள்.” ‘‘உணவு உண்ணும் நேரத்தைத் தவிர அனைத்து நேரத்திலும் உழைத்துக் கற்றால்?” ‘‘அப்போது முப்பது வருடங்கள் ஆகும்” […]
அவர், மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர். உறவினர் கல்யாணத்துக்கு வந்திருந்தார். கண்டக்டராக வேலைபார்த்து ரிட்டயர் ஆன, தன் வயதான அப்பாவிடம், அந்தக் கல்யாண வீட்டில், ‘‘அப்பா! 500 ரூபா இருந்தா கொடுங்க. என்கிட்ட இப்ப இல்ல’’ என்று கேட்கிறார். அப்பா உடனே, ‘‘இந்தாப்பா’’ என்று தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுக்கிறார். ‘‘ஏன்பா தாத்தா கிட்ட பணம் கேக்கறீங்க? உங்ககிட்ட இருக்குதானே’’ என்கிறாள் மகள். ‘‘இருக்கலாம். ஆனா, இப்படி அப்பாகிட்ட […]
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த பிரிட்டிஷ்காரர்களை அச்சமின்றி எதிர்த்தவர் மகாத்மா. ஆனால், சிறுவனாக இருந்தபோது காந்திக்குப் பயம் அதிகம். பாம்பு பயமும் திருடர் பயமும் நிறைய. இருட்டைக் கண்டாலே நடுங்குவார். இருட்டில் கண்களை மூடினால் பிசாசுகள் வந்து சூழ்ந்து கொள்வதாகவும் நினைத்து நடுங்குவார். காந்திக்கு தாய் புட்லி பாயின் பக்தியும் தெய்வ நம்பிக்கையும் கண்டு வியப்பு ஏற்பட்டது. தாயோடு அவர் கோயில்களுக்குச் செல்வதுண்டு. ஆனால் அவரின் இளம் உள்ளத்தில் பக்திப் பயிரை விளைவித்தவர், அவரது […]
வணக்கம். போக வேண்டிய இடத்திற்கு அவசர அவசரமாக ஓடுவதைவிட, நேரத்தில் கிளம்புவதே சரியானது. ஒரு காரியத்தைப் பதறாமல் செய்ய வேண்டுமானால், சரியான நேரத்தில் அந்தக் காரியம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வளவு விலைகொடுத்தாலும் கடந்துபோன ஒரு நொடியைக்கூட வாங்க முடியாது என்பதுதான் காலத்தின் தனித்தன்மை. அது யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை! ஓர் ஆண்டின் நிறைவுப் பகுதியில் நிற்கும்போது, ‘இந்த வருடம் நாம் என்ன செய்தோம்’ என யோசித்துப் பார்ப்போம். ‘இன்னும் உருப்படியாக நிறைய விஷயங்களைச் செய்திருக்கலாமே’ […]
வணக்கம். வேட்டிக்கு ஒரு பிராண்ட் பெயர் வைத்து, நம் பாரம்பரிய உடையான வேட்டியை மதிப்பிற்குரியவர்களின் ஆடையாக மாற்றிய பெருமை கொண்டது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். நற்சிந்தனைகளை நம் மக்களிடம் கொண்டு செல்வதற்காக ‘வெண்மை எண்ணங்கள்’ என்ற மாத இதழை 2012 நவம்பரில் ராம்ராஜ் காட்டன் தொடங்கியது. லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘வெண்மை எண்ணங்கள்’. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சந்தா செலுத்தி இந்த இதழைப் படிக்கின்றன. ராம்ராஜ் ஷோரூம்களில் ஆடைகள் வாங்க வருவோருக்கு அன்புப்பரிசாகவும் இந்த […]
இரண்டு பிள்ளைகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, தங்கள் அம்மாவிடம், ‘‘நீங்களே நியாயத்தை சொல்லுங்க’’ என்று கேட்டால்... ‘இந்தப் பிள்ளை செய்தது சரி’, ‘அந்தப் பிள்ளை செய்தது தவறு’ என்ற நியாய தர்மம் எல்லாம் அந்த அம்மாவுக்குச் சொல்ல வராது. ‘இரண்டு பிள்ளைகளும் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டுமே’ என்ற பதற்றம்தான் இருக்கும். ஆழமான நேசிப்பில் விளையும் உணர்வு அது.