வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான்.
ஸ்லிம் தோற்றத்தில் பெருமிதம் கொள்ளும் பல பெண்களுக்கும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பிரச்னை இருக்கும். அது, தோள்களைத் தாண்டிய பகுதியில் கைகள் மட்டும் பெரிதாவது. ஆறு மாதங்களுக்கு முன்பு பட்டுப்புடவைக்கு தைத்த ஜாக்கெட், இப்போது போட்டால் கைகளில் ஏறாது. ஏகப்பட்ட பணம் கொடுத்து வாங்கிவந்த ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸை போட்டுப் பார்த்தால், கைகள் ஏதோ மல்யுத்த சாம்பியன் போன்ற தோற்றம் தரும்.ஆண்களுக்கு கைகளை மடக்கி ‘ஆர்ம்ஸ்’ காட்டுவது அழகு. அதுவே பெண்களுக்கு அந்த இடத்தில் தசைத் திரட்சி […]
மந்திர வித்தை தெரிந்த பெரியவர் ஒருவர், ஊரை விட்டு விலகி காட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடில் அமைத்து மனைவியுடன் தங்கினார். காலை எழுந்து தோட்ட வேலை செய்து கொண்டிருந்தபோது வழிப்போக்கன் ஒருவன் பதற்றமாக எதையோ தேடிக் கொண்டு வந்தான். பெரியவர் அவனிடம், ‘‘என்ன தேடுகிறாய்?’’ என்று கேட்டார். ‘‘காட்டைக் கடந்து வேறு ஊருக்குப் போகிறேன். போகும் வழியில் பசித்ததே என்று அவித்த கடலையை சாப்பிட்டுக் கொண்டு வந்தேன். எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று கடலை ஒன்றைக் கொத்திக்கொண்டு […]
பெரிய பாம்பு ஒன்று காட்டில் கம்பீரமாக ஊர்ந்து வந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் பயந்து ஓடியது. காட்டுக்கு ராஜாவான சிங்கமே தன்னைக் கண்டு பயந்தது பற்றி பாம்புக்கு பெருமையாக இருந்தது. மற்ற விலங்குகள் எல்லாம் பாம்புக்கு பயந்து ஓடின. பறவைகள் அலறியடித்துக் கொண்டு உயரமான மரத்தில் அமர்ந்து கொண்டன. அதைப் பார்க்க பாம்புக்கு பெருமை தாளவில்லை. ஒரு மரத்தடியில் நின்றது. அங்கே ஒரு பொந்து இருந்தது. பொந்தில் எட்டிப் பார்த்தது. உள்ளே சிறிய பாம்புகள் இருந்தன. பெரிய […]
மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை.
அனுபவம் என்பது புதுவிதமான ஓர் ஆசிரியர். அது பாடங்களைக் கற்றுத்தந்த பின் தேர்வு வைப்பதில்லை. தேர்வின் மூலம்தான் பாடங்களைக் கற்றுத்தருகிறது.
வீட்டில் தனியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, மருந்து பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டு விட்டாள். விழுந்த வேகத்தில் அதன் மூடி திறந்து, பாதி மருந்து வெளியே கொட்டிவிட்டது. வேலைக்கு சென்ற அம்மா திரும்பி வந்து திட்டுவாரே என்று பயந்தாள். மருந்து பாட்டிலில் நீரை ஊற்றினாள். குலுக்கினாள். பாட்டில் நிறைந்திருப்பது போல ஏற்பாடு செய்து விட்டு அமைதியாக இருந்து கொண்டாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளின் குட்டித்தம்பிக்குக் காய்ச்சல் வந்தது. காய்ச்சல் குறைவதற்காக இவள் நீர்விட்டு கலக்கியிருந்த மருந்தில் […]
கிராமத்தில் வாழ்ந்த இளைஞன் ஒருவன், நகரத்துக்குப் பிழைப்பு தேடிச் சென்றான். நகரத்துக்குப் போக வேண்டுமானால் ஒரு காட்டைக் கடக்க வேண்டும். அங்கே ஓர் ஓநாய் அவனைத் துரத்தியது. ஓநாயிடமிருந்து தப்பிப்பதற்காக வியர்க்க விறுவிறுக்க ஒடினான். ஒரு கரடி அவனைக் காப்பாற்றியது. கரடிக்கு நன்றி சொன்னான். கரடி அவன் எதற்குப் போகிறான் என விசாரிக்கிறது. பிறகு அவனை கிராமத்துக்கே போய் அது சொல்லும் மந்திரத்தின் அர்த்தம் தேடச் சொல்கிறது. அந்த மந்திரம், ‘எள்ளும் உறியே பனி எடுத்தால் புல்லும் […]
அன்பு டெலஸ்கோப் வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது. பொறாமை மைக்ராஸ்கோப் வழியாகச் சின்னதாகவே பார்க்கிறது.