‘‘அம்மா எனக்கு வீட்டுக்குள் அடைந்திருக்க பிடிக்கவில்லை’’ என்றாள் நிலா. ‘‘வா, நம் காரில் ஊர் சுற்றி விட்டு வருவோம்’’ என்றார் அம்மா. அம்மாவும் மகளும் நகரத்தைத் தாண்டி கிராமத்தை நோக்கி நகர்ந்தார்கள். ‘‘அம்மா, இன்னும் கொஞ்ச தூரம் போகலாம்’’ என்றாள் நிலா. ‘‘சரி’’ என்று இன்னும் கிராமப்பகுதிக்குள் காரை செலுத்தினார் அம்மா. சரியாக ஒரே ஒரு கார் மட்டுமே செல்ல முடிகிற பாதை. நடுவில் ஒரு கல் இருந்தது. கல்லை அகற்றினால்தான் கார் போக முடியும். ‘‘அம்மா, […]
மகாத்மா காந்தியே ஒரு அதிசயம். அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விஷயங்கள் அபூர்வமானவை; அதிசயமானவை. அவரைப் பற்றிய நூல்களிலும், அவர் எழுதிய நூல்களிலும் காணக் கிடைக்கும் தகவல்களைத் தாண்டி, அவரோடு பழகிய பலர் தந்திருக்கும் அந்த விஷயங்கள் இங்கே…
சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்; அவற்றைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!
அரசன் ஒருவன் பக்கத்து நாட்டைத் தாக்கி மக்களை சிறைபிடித்து அடிமையாக்கி வைத்திருந்தான். அவர்களை சித்திரவதை செய்து கடுமையாக வேலை வாங்கினான். அந்த நாட்டுக்கு ஒரு ஞானி வந்தார். ஞானியை மதிப்புடன் வரவேற்று அரசன் உபசரித்தான். ஞானியோ, ‘அடிமையாக மக்களைப் பிடித்து வைத்திருப்பது தவறு’ என்று புத்திமதி சொல்லி அரசனைத் திருத்தப் பார்த்தார். ஆனால் அரசன் திருந்தவே இல்லை. ‘யாரையும் விடுதலை செய்ய முடியாது’ என்று பிடிவாதமாக சொல்லிவிட்டான். இதைக் கேட்ட ஞானி, அரசன் சிறைப் பிடித்து வைத்திருக்கும் […]
வணக்கம். ‘பிள்ளைகளுக்காகத்தானே இந்த வாழ்க்கை’ என்று மெழுகாக தங்களை உருக்கிக்கொள்ளும் பெற்றோர்களை ஏழை முதல் பணக்காரர்கள் வரை எந்த நிலையிலும் பார்க்கலாம். கல்யாணப் பந்தியில் பரிமாறப்பட்ட இனிப்பு தன் மகனுக்கு மிகவும் பிடிக்கும் என்று சாப்பிடாமல் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட தாயைப் பார்த்தபோது ஆச்சர்யப்பட்டேன். குழந்தை நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக மனைவியையும் குழந்தையையும் சென்னையில் விட்டுவிட்டு, வெளியூரில் வீடு வாடகை எடுத்து தனியாக வாழும் தகப்பன்களைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். குழந்தைகள் விரும்புகின்றவற்றை தேடித் தேடித் […]
ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்று, பாதுகாப்பற்ற சூழலில் பணத்தைப் பறிகொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. ‘பாதுகாவலர்கள் இல்லாமல் ஏ.டி.எம் மையங்கள் செயல்படக் கூடாது’ என காவல் துறை அறிவுறுத்தியதால், பல வங்கிகளின் ஏ.டி.எம்கள் இரவு நேரத்தில் மூடப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஏ.டி.எம் பயன்பாட்டுக்கு கட்டணமும் விதிக்கின்றன வங்கிகள். ஏ.டி.எம் மையங்களை எச்சரிக்கையோடு பயன்படுத்துவது எப்படி? * வங்கிக் கிளையோடு இணைந்துள்ள ஏ.டி.எம்மையோ, பெரிய வணிக மற்றும் அலுவலக வளாகங்களில் இருக்கும் ஏ.டி.எம்களையோ பயன்படுத்துங்கள். எப்போதும் மக்கள் நடமாட்டமும் […]
வெளிநாட்டில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் அழகான தேவாலயம் இருந்தது. அதன் பொறுப்பைக் கவனிக்க கறுப்பர் இனத்தவர் ஒருவர் வந்தார். இனப் பாகுபாடு காட்டும் குறுகிய மனம் படைத்த சிலர், அவரை நிறம் காரணமாக வெளியே போகச் சொன்னார்கள். அவரோ அதைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையை செம்மையாகச் செய்து கொண்டிருந்தார். இவரை எப்படியாவது தேவாலயப் பொறுப்பிலிருந்து துரத்த வேண்டும் என்று நினைத்த அடிப்படைவாதிகள், ஆயுதங்களோடு அவரைத் தாக்க வந்தார்கள். அவர் அதற்கும் கலங்காமல் தாக்க வந்தவர்களின் கண்களைக் […]
‘வைகறை துயிலெழு’ என ஔவையார் சொன்னார். வைகறை என்பது அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை. சூரிய உதயத்துக்கு முன்பாக வைகறையின் மையத்தில் & அதாவது காலை நான்கு மணிக்கு எழுவது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். சூரிய மறைவிற்குப் பின் தூங்கி, சூரிய உதயத்திற்கு முன்பு எழும் வழக்கமே ‘பின் தூங்கி முன் எழுவது’ எனப்படுகிறது. உடல் ஆரோக்கியம், செல்வம், அறிவு எல்லாம் தரும் இந்த இயற்கை சார்ந்த தூக்க முறையால் நமக்கு பத்து […]