தினம் ஒரு கதை - 17

மிதிலை நாட்டில் சில துறவிகளுக்கு அந்த சந்தேகம் இருந்ததை நாரதர் கண்டுபிடித்துவிட்டார். என்ன சந்தேகம்? ‘மன்னர் ஜனகர் சுகமாக எல்லாவற்றையும் அனுபவித்து, வேளா வேளைக்கு விருந்து உண்டு, பட்டு மெத்தையில் படுத்துறங்கி ராஜ வாழ்க்கைதானே வாழ்கிறார். ஏன் அவரை பெரும் துறவி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அவர் எப்படி துறவியாவார்?’ அப்படி சந்தேகப்பட்ட துறவிகளை எல்லாம் நாரதர் விருந்துக்கு அழைத்தார். மூன்று நாட்கள் தொடர்ச்சியான விரதத்தால் முனிவர்கள் கடும் பசியில் இருந்தார்கள். விருந்து ஆரம்பமாயிற்று. முனிவர்கள் தத்தம் […]

Read More
இன்று ஒன்று நன்று!

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வது, கிட்டத்தட்ட எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது போன்றதுதான்!

Read More
இன்று ஒன்று நன்று!

வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள். 1. நம்பிக்கை2. சத்தியம்3. உறவு4. இதயம்இவை உடைந்தால் சத்தம் கேட்காது. ஆனால், வாழ்க்கை முழுக்க அந்த வலி இருக்கும்.

Read More
தினம் ஒரு கதை - 16

தாமஸ் ஜெஃபர்சன் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அதற்குமுன் துணை ஜனாதிபதியாக இருக்கும்போது தனியே பயணம் மேற்கொள்கிறார். சூழ்நிலை காரணமாக சிறுநகரம் ஒன்றில் இரவு தங்க வேண்டிய நிலை வருகிறது. அப்போது திடீரென பெய்த மழையில் நனைந்து, அவர் உடையெல்லாம் சேறாகிவிட்டது. அந்த அழுக்கு கோலத்துடன் ஒரு விடுதிக்குச் சென்று, ‘‘அறை இருக்கிறதா?’’ என்றார். விடுதி உரிமையாளர் இவரின் கோலத்தைப் பார்த்து, ‘‘அதெல்லாம் இல்லை’’ என்று அலட்சியமாகச் சொன்னார். தாமஸ் ஜெபர்சன் வேறு விடுதி பார்த்துச் […]

Read More
தன்னம்பிக்கையை செதுக்கும் 6 வழிகள்!

வாள் கலை! ஜப்பானிய சாமுராய் வீரர்களைக் கேட்டால், ‘‘போரும் காதலும் ஒன்றுதான்’’ என்பார்கள். போரில் மனிதர்களை வெல்ல வேண்டியிருக்கிறது; காதலில் மனித மனங்களை வெல்ல வேண்டியிருக்கிறது. போர்முனைக்கு ஒரு வீரன் எடுத்துச் செல்லும் வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதே ஒரு மாபெரும் கலை. தன்னிகரற்ற வாள் சண்டை வீரரும், புகழ்பெற்ற ஜென் துறவியுமான தலான், இதுபற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது நிஜத்தில் வாள் சண்டைக்கான கையேடு இல்லை; வாழ்க்கைக் கையேடு! தன்னம்பிக்கையை வளர்க்கும் அந்தக் கையேட்டிலிருந்து […]

Read More
இன்று ஒன்று நன்று!

வாழ்க்கையில் எல்லாவற்றையும் வேகப்படுத்துவதை விட வாழ்வது மிக முக்கியமானது. மகாத்மாகாந்தி

Read More
தினம் ஒரு கதை - 15

பெரும் மக்கள் கூட்டம் ஒன்று, தங்கள் இடத்திலிருந்து இன்னொரு நிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தது. பயணத்தில் மக்களிடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்து வைக்க தலைவன் தேவை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். தங்கள் தலைவன் வலிமைமிக்கவனாக, தைரியமானவனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தங்கள் கூட்டத்தில் 10 நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த 10 பேரும் உடல் வலிமைமிக்கவர்கள். தைரியமானவர்கள். இந்த 10 பேரில் யார் தலைவனாவது என்பதை விவாதிக்க  இரவில் தீ மூட்டி சுற்றி அமர்ந்திருந்தனர். […]

Read More
தினம் ஒரு கதை - 14

வேட்டைக்குப் போன இளவரசன், திரும்பி வரும்போது ஒரு முதியவரைத் தன் தேரில் கட்டி இழுத்து வந்தான். மக்கள் ‘ஏன்?’ என்று கேட்டார்கள். ‘‘இவர் என்னை ‘மடையன்’ என்று சொல்லிவிட்டார்’’ என்றான் இளவரசன். ‘‘நாட்டின் இளவரசனையே மடையன் என்று சொல்லிவிட்டாரா? இவரை தண்டிக்க வேண்டும்’’ என்று மக்கள் கிளர்ச்சியில் இறங்கி விட்டார்கள். மக்களின் கிளர்ச்சியைப் பார்த்து, முதியவருக்கு மரண தண்டனை விதிப்பதாக மன்னர் அறிவித்தார். அந்த முதியவரை மக்கள் முன்பாக நிறுத்தி தண்டனை கொடுக்க முடிவு செய்கிறார்கள். தண்டனையை […]

Read More
தினம் ஒரு கதை - 13

ஓர் இளவரசன் வேட்டைக்குச் சென்றான். போன இடத்தில் வழிதவறி அங்கும் இங்கும் அலைந்து, பழைய பாழடைந்த சிறு கட்டிடம் ஒன்றில் ஒதுங்கினான். உள்ளே மூவர் மெல்லிய குரலில் பேசுவது கேட்டது. முதல் குரல் சொன்னது, ‘‘நான்தான் நெருப்பு. ஒருவேளை நான் பிரிந்து போய்விட்டால், தூரத்தில் தெரியும் புகையை வைத்து என்னை அடையாளம் கண்டு வந்து சேருங்கள்.’’ இரண்டாம் குரல், ‘‘நான்தான் நீர். ஒருவேளை வழிதவறி நான் பிரிந்து போய்விட்டால், எந்த இடத்தில் பச்சைப் பசேல் என்று செடி, […]

Read More
1 28 29 30 31 32 38
crossmenu