நிகழ்காலத்தை நாம் இழப்பதால் எல்லாக் காலத்தையும் இழக்கிறோம்.
நேரம்தான் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த நாணயம். அந்த ஒற்றை நாணயத்தை எப்படிச் செலவழிக்கலாம் என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதை மற்றவர்கள் செலவிட அனுமதிக்காதீர்கள்.
கடற்கரையை ஒட்டிய காடு அது. அங்கே ஒரு முயல் துள்ளி துள்ளி ஒடும் போது யானையும் திமிங்கலமும் பேசுவதை கேட்டது. “நான் தான் தரையில் வாழும் விலங்குகளில் பெரியவன்” யானை சொன்னது.“நான் தான் கடலில் வாழும் விலங்குகளில் பெரியவன் “திமிங்கலம் சொன்னது. “நாம் இருவரும் சேர்ந்தால் இந்த காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் நமக்கு அடிமையாக்கலாம்” யானை ஆணவத்தால் பேசியது.“ஆம் நாம் இணைந்து காட்டில் உள்ள அனைவரையும் அடி பணிந்து நமக்கு வேலை செய்ய வைப்போம்” திமிங்கலமும் […]
கண்களைத் திறந்து பாருங்கள்..அனைவரும் தெரிவார்கள். கண்களை மூடிப்பாருங்கள்... உங்களுக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
கோழி ஒன்று ஒரே ஒரு கோதுமையை பார்த்தது. ”யார் இந்த கோதுமையை விதைப்பது” என்றது“நான் விதைக்க மாட்டேன்” என்று வாத்தும், பன்றியும் ஒதுங்கின. கோழி கோதுமையை விதைத்தது. அது வளர்ந்து பெரிதாகும் போது “யார் இதற்கு நீர் ஊற்றுவது” கோழி கேட்டது.“நான் செய்ய மாட்டேன்” பன்றியும் வாத்தும் ஒதுங்கின. கோதுமை வளர்ந்து கோதுமைகளாக அறுவடைக்கு தயாரானது. “யார் இதை அறுவடை செய்து மில்லுக்கு எடுத்து செல்வது” கோழி கேட்டது.“எங்களால் முடியாது” வாத்தும் பன்றியும் ஒதுங்கின. கோதுமையை மாவாக்கி எடுத்து […]
கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்; அது என்ன செய்கிறது என்று பாருங்கள். கடந்து போய்க் கொண்டே இருங்கள்!
கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் ஆளுக்கொரு எலுமிச்சை பழம் கொண்டு வருமாறு முதல் நாளில் பேராசிரியர் சொன்னார். ‘ஏன் எலுமிச்சை பழம்?’ என்ற யோசனையுடன் மறுநாள் மாணவர்கள் கொண்டு போனார்கள். ‘‘அவரவர் இனிஷியலை எலுமிச்சை பழத்தில் செதுக்குங்கள்’’ என்றார் பேராசிரியர். மாணவர்கள் செய்தார்கள். கூடை ஒன்றில் அனைத்து எலுமிச்சை பழங்களையும் போடச் சொன்னார். நன்றாகக் கலந்தார். மாணவர்களை அவரவர் பழத்தை எடுக்கச் சொன்னார். இனிஷியல் பார்த்து எல்லோரும் சரியாக எடுத்துவிட்டார்கள். அனைவரையும் எலுமிச்சை பழத்தோலை உரித்து […]
1.இந்தியாவில் தெருக்களுக்குப் பெயர் வைக்கப்படுவதில் முதலிடம் பிடிப்பவர் மகாத்மா காந்தியே! நாடு முழுக்க எல்லா பெருநகரங்களிலும் ஒரு முக்கியமான வீதிக்கு காந்தி பெயர் இருக்கும். இந்தியாவின் முக்கியமான 53 வீதிகளுக்கு காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகில் 48 நாடுகளில் காந்தி பெயரில் வீதி உள்ளது. 2. காந்தி பிறந்த தினம். 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் சிற்றூரில் பிறந்தார். காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக […]
பலவீனங்களை உணருங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேளுங்கள். உங்கள் பலவீனம் எது, உங்களிடம் நீங்கள் நினைத்து நினைத்து வெட்கப்படும் குணம் எது என்பதை அறியுங்கள். முகப்பரு, எவ்வளவு அழுத்தி வாரினாலும் படியாத தலைமுடி, கூட்டமாக மனிதர்களைப் பார்த்தால் கூச்சப்பட்டு தலைகவிழ்ந்து கொள்வது என ஏதாவது ஒரு விஷயம் உங்களை தன்னம்பிக்கை இல்லாதவராக ஆக்கியிருக்கும். உங்கள் தாழ்வு மனப்பான்மைக்கு எது காரணமோ, அதற்கு ஒரு பெயர் வையுங்கள். அந்தப் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, துண்டு துண்டாக கிழித்துப் […]
வணக்கம். ஒரு ஆப்பிள் பழத்தில் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பதை நம்மால் எண்ணிப் பார்த்து சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு விதையில் எத்தனை ஆயிரம் ஆப்பிள் பழங்கள் இருக்கும் என சொல்லமுடியாது. விதைகளின் வீரியம், ஆராய்ச்சிகளைத் தாண்டி ஆச்சரியம் தரக் கூடியது. மூன்று ஆப்பிள்களுக்கு உலக வரலாற்றில் முக்கியமான இடம் இருக்கிறது. முதல் ஆப்பிள், மத நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உலகத்தில் மனிதர்கள் உருவாக ஆப்பிள் பழமே காரணம் என்பார்கள். கடவுளின் எச்சரிக்கையை மீறி, […]