எந்த வயதில் என்ன முதலீடு!

பண விஷயத்தைப் பொறுத்தவரை, கடந்து போன நாட்களில் செய்யாமல் விட்ட முதலீடுகள் மற்றும் சேமிப்புகளைப் பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருப்பது பலரின் இயல்பு. ‘‘கிரவுண்ட் ஒரு லட்ச ரூபாய்க்கு கூவிக் கூவி வித்தான். காடு மாதிரி இருக்கேன்னு தயங்கினேன். ஒரு ஸ்கூல் கட்டினதும் பத்து வருஷத்துல எல்லாம் மாறிப் போச்சு. இப்போ விசாரிச்சா அம்பது லட்சம் சொல்றான்’’ என ஆதங்கப்படும் குடும்பத் தலைவர்கள் நிறைய. இப்படி புலம்புவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இருபதில் ஓய்வூதியம்: […]

Read More
தினம் ஒரு கதை - 29

பள்ளி மாணவர்கள் உணவு இடைவேளையின்போது வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மரியா டிபன் பாக்ஸை திறந்தாள். அதில் கம்பங்களியும், வேர்க்கடலை துவையலும் இருந்தன. அதைப் பார்த்து கவிதா, ‘‘என்ன இது, பாக்கவே ஒருமாதிரி இருக்கு’’ என்று கேலி செய்தாள். சப்பாத்தி ரோல், சாதம் என்று மற்றவர்கள் கொண்டு வந்திருக்க, மரியா கொண்டு வந்த கம்பங்கூழைப் பார்க்க அவர்களுக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது.  மரியா மற்றவர்களின் கிண்டலால் மனம் வருந்தி, சாப்பிடாமல் எழுந்து போய்விட்டாள். அன்று மதியம் அறிவியல் வகுப்பில் […]

Read More
வாயுத் தொல்லைக்கு குட்பை!

உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இல்லாதவர்கள், வாயுத் தொல்லை என்ற பிரச்னையைக் கடந்து வராமல் இருக்க முடியாது! அதிலும் இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை பெரும் சவாலாக இருக்கிறது. காரணம், உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான். உணவை எப்படி உண்ண வேண்டும், எப்போது உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும் என எதுவுமே பலருக்குத் தெரிவதில்லை.நாம் உண்ணும் உணவில் இருக்கும் மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து, நார்ச்சத்து எல்லாம் முழுமையாக உறிஞ்சப்படாமல், உணவு சரியாக […]

Read More
இன்று ஒன்று நன்று!

சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்; அவற்றைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!

Read More
தினம் ஒரு கதை - 28 

அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனிடம் அவர் நண்பர் ஒருவர் வேதனையுடன் வந்தார். எப்போதும் வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பதாக புலம்பினார். அழுதார். இனிமேல் தன்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்று இயலாமையை வெளிப்படுத்தினார். நண்பர் பேசப் பேச, லிங்கன் கரும்பலகையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ‘‘நான் வேதனையுடன் புலம்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறுதலோ யோசனையோ சொல்லாமல் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்க எப்படி மனம் வந்தது?’’ என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார் நண்பர். ‘‘என் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை […]

Read More
இன்று ஒன்று நன்று!

நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர, நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை.

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு - 6

வணக்கம். ‘நீங்க ஏன் ஒரு சாமியாரை உங்க விளம்பரங்களில் எல்லாம் போடுறீங்க?’’ என்று ஒருவர் என்னிடம் கேட்டார். நான் குருவாக ஏற்றுக் கொண்ட ‘வேதாத்திரி மகரிஷி’ அவர்களைத்தான், கேள்வி கேட்டவர் ‘ஒரு சாமியார்’ என்று குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய வாழ்வையும், ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சியையும் ‘மகரிஷிக்கு முன்’ - ‘மகரிஷிக்குப் பின்’ என இரண்டு கட்டங்களாகப் பிரிக்க இயலும். அப்பா, அம்மா சொல்படி கேட்டு நடந்துகொள்கிற பிள்ளை நம் சமூகத்தில் சமத்துப் பிள்ளை. […]

Read More
இன்று ஒன்று நன்று!

சோகம் எனும் பறவை உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

Read More
தினம் ஒரு கதை - 27

ஒரு நாட்டில் முரட்டுத்தனமான ராஜா ஒருவர் இருந்தார்.  அவர் கட்டளையிட்டால் அது நடந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்.  அந்நாட்டின் சிறந்த கட்டடக் கலைஞரை அழைத்து “நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. மூன்று நாட்களில் வானில் பறக்கும் அரண்மனை ஒன்று கட்டித்தர வேண்டும். எவ்வளவு வேலையாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்றார்.  கட்டிட கலைஞர், ராணி, மந்திரி என்று யார் சொன்னாலும் ராஜா கேட்பதாயில்லை. “மூன்று நாட்களுக்குள் கட்டித்தரவில்லை […]

Read More
1 24 25 26 27 28 38
crossmenu