பள்ளி மாணவன் ஒருவன் தினமும் மதிய உணவு இடைவேளையில் அம்மா கொடுத்த உணவில் பாதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதி உணவைக் குப்பையில் கொட்டிவிடுவான். சக நண்பர்கள், ‘‘ஏன் இப்படி உணவை வீணாக்குகிறாய்? உன் அப்பா டிரைவராக வேலை பார்த்து சம்பாதிக்கும் காசு அல்லவா அது’’ என்று கேட்டார்கள். ‘‘என் உணவுக்கான விலை அதை விளைவித்த விவசாயிக்குக் கிடைத்து விட்டது. அதன்பின் அதை நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? எனக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு பசிக்கும் என்று […]
நான் தான் என் நேரத்தைத் தீர்மானிக்க வேண்டும்; என் நேரம் என்னைத் தீர்மானிப்பதை அனுமதிக்க முடியாது.
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்த நியூ மெக்சிகோ மாகாணத்தில் சில கிராமங்களை நோக்கி வெள்ளம் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் ஒரு டெலிபோன் எக்சேஞ்ச் இருந்தது. அங்கிருந்துதான் அந்த கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு கொடுப்பார்கள். வெள்ளம் முதலில் டெலிபோன் அலுவலகத்தைத்தான் தாக்கும் என்பதால் அனைத்து ஊழியர்களும் எச்சரிக்கையாக எழுந்து ஓடிப்போய்விட்டனர். ஆனால் புரூக்ஸ் என்ற பெண் மட்டும் அப்படி எழுந்து போகவில்லை. ‘வெள்ளம் வந்தால் வரட்டும், மக்களைக் […]
ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு, சிதறவிட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத்தான் தெரியும்.
காட்டில் ஒரு வேடன் தன் மகனோடு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மகன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டு வந்தான். ‘‘அப்பா, மனிதர்களிடமிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதேபோல வன விலங்குகளிடம் இருந்தும் நாம் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா?’’ ‘‘ஆமாம் மகனே! இயற்கையில் இருக்கும் எல்லாமே நமக்கு ஆசான்கள். எல்லாவற்றிடம் இருந்தும் நாம் ஏராளமான பண்புகளைக் கற்றுக்கொள்ள முடியும்!’’ ‘‘அப்பா, புலியிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா?’’ ‘‘ஆம். புலியிடம் இருந்து வேகத்தைக் கற்றுக் கொள்ளலாம்.’’ […]
இன்னல்களும் பிரச்னைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காகக் கடவுள் வழங்கும் வாய்ப்புகள். உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் லட்சியங்களும் தகர்க்கப்படும் போது, அந்தச் சிதைவுகளுக்கிடையே தேடிப்பாருங்கள்... இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
எந்த விஷயத்திலாவது கருத்து வேறுபாடு வரும்போது, யார் விட்டுக் கொடுப்பது என்று போட்டி போட்டு, கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுப்பதுதான் சிறந்த வாழ்க்கை என நிறைய பேர் நினைக்கிறார்கள்.வெறுமனே விட்டுக் கொடுத்து வாழ்கிறவர்கள் சிறந்த கணவன் & மனைவி இல்லை. புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால்தான் சிறந்த வாழ்க்கை வாழ முடியும். இல்லாவிட்டால் எஜமான்-அடிமை வாழ்க்கைதான் கிடைக்கும். யார் எஜமான், யார் அடிமை என்பது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி மாறும்!‘ஏன்’ என்று கேட்க முடியாதபடி ஒருவருக்கு வாழ்க்கை […]
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. எலெக்ட்ரானைக் கண்டுபிடித்த இயற்பியல் விஞ்ஞானி நீல் போர் யோசனையில் இருந்தார். அவரது உதவியாளர்கள் பதற்றமாக இருந்தனர். நாஜி படைகள் டென்மார்க் தலைநகரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் நாட்டையே ஆக்கிரமித்து விடுவார்கள். நீல் போருக்கு கிடைத்திருந்த நோபல் பரிசு தங்கத்தால் உருவாக்கப்பட்டது. நாஜி படையினர் தங்கத்தைப் பார்த்தால் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். எப்படி இந்த தங்க விருதை மறைத்து எடுத்துச் செல்வது? நீல் போர் ஆய்வகத்தில் அவர் உதவியாளர்கள் குழம்புகிறார்கள். […]
சற்றே ஓய்வுக்கும் கேளிக்கைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியாதவர்கள், உடல்நலக் கேட்டுக்காக நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டிவரும்.
ஓர் ஆப்பிள் தோட்டத்தின் மூலையில் இருந்த ஒரே ஒரு மரம் சரியாய் காய்க்காமல் இருந்தது. தினமும் தோட்டத்தின் சொந்தக்காரர் வந்து ‘ஆப்பிள் காய்த்திருக்கிறதா’ என்று பார்த்துப் பார்த்து சலித்துப் போனார். ‘இந்த மரம் தேவையில்லாமல் நிலத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மரம் தேவையில்லாமல் மற்ற மரங்களுக்கான நீரை உறிஞ்சி வீணாக்கிக் கொண்டிருக்கிறது’ என்று நினைத்து அந்த காய்க்காத ஆப்பிள் மரத்தை வெட்டப்போனார். அம்மரத்தில் இருந்த பறவைகளும் பூச்சிகளும் அவரிடம் வந்து கெஞ்சின. ‘‘இதை வெட்டாதீர்கள். இது எங்கள் […]